Skip to main content

Posts

Showing posts from July, 2010

நந்தவனத்தாண்டி பாடல்கள்

1.அவனைக் கொண்டு போய் நீ அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய். பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய். அவன் இது வரை பார்தேயிராத அருவி அது. தண்நீர் அவன் தலையில் விழுந்து தேகமெங்கும் வழிந்தது. மெல்லிய விசும்பல்களை, ஒரு கனத்த அழுகையை அது கரைத்துக் கொண்டோடியது. அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான். நீ தான் விடவில்லை. இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான். 2. நீ அவனுக்கென மதுரமான உணவுகளைச் சமைத்தாய். அழகான விரிப்புகள் போர்த்தப்பட்ட மேசையில் இருத்தினாய். பளிங்கு போன்ற குடுவையில் நீர் வைத்தாய். அவன் பசியறியாதவள் நீ. அவன் முகம் முழுக்க சாப்பிட்டான். நெஞ்செங்கும் நீர் குடித்தான். காணச் சகியாத நீ கண்களைத் திருப்பிக் கொண்டாய். 3. நாம் கதைகளில் மட்டும் படித்திருக்கிற பொன் நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது. கண் கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு. 100 முறை ஸ்பரிசித்து விட்டால் ஓடி விடும் பறவை அது. அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான். பிறகு விவரம் அறிந்து பதறியவன் இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக நூறாவது முறை தொட்ட

நான் குரங்கு

இரண்டு கவிதைகள் நான் குரங்கு நான் குரங்கு. பானைக்குள் விழுந்து கள் குடிக்கும்குரங்கு. வாலைக் கண்டு பாம்பென்று பதறும் வழிவந்ததில்லை. நுனிவாலில் எழுந்து படம் விரிக்கும் பாம்பை பகடி சொல்லும் குரங்கு. நான் குரங்கு. காண்பதையெல்லாம் களவுண்டு தின்றும் கும்பிக்குள் தடநெருப்பு அடங்காத குரங்கு. நான் குரங்கு. நினைவுக் கோளாரால் மதியழிந்த குரங்கு. எல்லா மரத்திற்கும் தாவி எல்லா கிளைகளையும் உலுக்கி எல்லா இலைகளையும் உதிர்த்து விட்ட பின்னும் நினைவடங்கா பெருவெறியில் மண்ணைக்கீறி வேரைக் கடிக்கும் மூடக்குரங்கு. நான் ஒரு குரங்கு. தீங்கொன் றறியாத அப்பாவிக் குரங்கு. ஒடிந்த கிளைகளை ஆட்டிப்பார்க்கும், னைந்த கனிகளை முகர்ந்து பார்க்கும், உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு போய் மரத்திலேயே ஒட்டப்பார்க்கும் பேதைக் குரங்கு. நான் ஒரு குரங்கு. அடிக்கடி ஆப்பில் அகப்பட்டுழலும் அழுமூஞ்சிக்குரங்கு. மருந்தில்லாக் கொடுநோயால் தாக்குண்ட குரங்கு.

இரண்டு கவிதைகள்

இந்த முறை சுவர்ணலதா சரியாகப் பாடவில்லை. அவன் வேண்டுவது ஒரு பிரதி. 15/01/2009 ன் பிரதி. அதாவது 15/01/2010 என்கிற வெள்ளைத்தாளில் 15/01/2009 ன் பிரதி. அந்த நாளின் அதே ஆடையை முன்பே தாயார் செய்து வைத்திருந்தான். அன்று போலவே லேசான தாடியை உருவாக்கியிருந்தான். அறுந்து போன அந்த செருப்புக்கு பதிலாக அதே ரகத்தின் புதிய செருப்பை அணிந்திருந்தான். அதே பேருந்தில் ஏறி அதே எண் கொண்ட இருக்கையில் அமர்ந்து அப்படியே தலை சாய்த்து அதே பாடலைக் கேட்டான். முன்னிருக்கையில் ஒரு சிறுமி அழுதுகொண்டிருந்தாள். அவள் தகப்பன் அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவள் அன்றைப் போலவே ஒரு நீல நிற பலூனைக் கேட்டாள். அவனும் அதையே தான் வாங்கித்தந்தான். ஆனால் இதில்லை என்று அவள் மறுத்துக்கொண்டிருந்தாள். அவன் அதான் பாப்பா இது அதான் பாப்பா இது என்று தேற்றிக்கொண்ட