Skip to main content

Posts

Showing posts from July, 2011

குட்டி குட்டியாக சில பிரமாதமான வாழ்க்கைகள்

” இந்த வாழ்வு தாறுமாறான பீட்டில் பாடப்படும் மோசமான பாடல் ” என்று சொல்வார் சின்னதங்கம் பீட்ட்ர்ஸன். அதனால் தான் அதற்குள் குட்டி குட்டியாக சில பிரமாதமான பாடல்கள். ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும் ஓட்டிச் செல்கிறது.. ஒரு நாள், அது சைக்கிள் சிறுவர்கள் கையசைத்து கடந்து செல்கிற PBS வாகனம். பெருநகர சாலையின் வெள்ளைக் கோட்டிற்கு இப்புறம் கருங்குயில்கள் பறந்து திரியும் நந்தவனம்... மறு நாள், அது பித்தம் முற்றிய ஒரு மேற்கத்தியனுடையது. ஹாரனின் ஊளையை இன்னொரு கருவியிசையாக்கிக் கொண்டு நூலிடைச்சந்துகளில் புகுந்து வளைந்து களிபீடித்தாடுவது... ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும் ஓட்டிச் செல்கிறது... நானும் ஆண்ட்ரியாவும் கடவுளாகிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்டதொரு பெரிய டேங்கர் லாரி மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது ஆனந்தம்.. பரமானந்தம்.. ( ஜான் சுந்தருக்கு..)

என் பொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன்

என் மொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன் அது கன்னங்கரு குகையில் அலைந்து திரியும் கன்னங்கரு மிருகம். வன்மத்தின் கொள்ளி மின்னுகிற கண்கள் அதன் உருவம். இந்த உலகத்தின் ஒவ்வொரு புன்னகையும் அதன் கொள்ளியில் வாய்வைத்து ஊதுகிறது. சொர்க்கபுரியின் கூச்சல்களை சதா உன்னித்திருக்குமது அதை சகிக்கவொண்ணாத தருணத்தில் ஒரு இடியை உறுமுகிறது. கடவுள் அந்தரத்தில் மறைகின்ற மாமிச துண்டங்களை அதற்கு வீசியெறிந்தார். எனவே அது பக்கத்து தட்டை பார்க்க வேண்டி வந்தது அழுகையில் ஊறி நைந்த இரவுகளில் இருந்து திசைதெறிக்க ஓடி வருமதன் குறுக்கே நீதியை முழங்கும் கனவானை அது வாயைதிறவாமலேயே மென்று விடுகிறது.