இந்த இரவில் விழித்திருந்து இரவின் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் முத்தமிட்ட இதழ்கள் ஒற்றை மர உதிரும் மஞ்சள் நிற இலைகள் மயக்கமூட்டும் மதுக்குடுவையின் மூடிகள் காணவே காண முடியாத தூரக் கிணறுகளின் ஆழ மீன்கள் மற்றும் என் நண்பர்கள் தங்கள் மனைவிகளோடு உறங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன் இந்த மழைக்காலத்தில் வெய்யில் எவ்வளவு விருப்பமானதோ அப்படித்தான் எனக்கும் இரவின் கண்களைப் பார்ப்பதும் ஆனாலும் பெரியதொரு குற்றச்சாட்டோடு அப்போதுதான் நான் கண்ணீர் நிரம்பிய மெத்தைகளில் புரண்டு படுக்கிறேன்.