இந்தப் புத்தகத்தைப் படிக்கவும் , இது குறித்து எழுதவும் அடிப்படை தகுதியொன்று அவசியம் என்று நினைக்கிறேன். அது தானும் ஒரு வகையில் திருடன்தான் என்கிற புரிந்துணர்வே. சமூக கட்டுப்பாட்டை குலைக்கும் திருட்டு என்கிற குற்றம் தண்டனைக்குரியதாகிறது. இது போலவே சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற ஒழுங்குகளை குலைக்கிற பலவும் தண்டனைக்குரிய குற்றங்களே என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருடர்கள் “ க்ளவுஸ் “ அணிந்து கொள்ளும் போதும் எங்கேனும் ஓரிடத்தில் தன் கைரேகையை தவற விட்டுவிடுகிறார்கள்.ஆனால் வெடிகுண்டை சத்தமில்லாமல் வெடிக்க வைப்பதில் சமத்தர்களான நாம் வெகு நிதானமாக, வெகு நுட்பமாக , தேர்ந்த கைகளால் குற்றங்களைச் செய்கிறோம். தனிமையில் நம் சிந்தை அடிக்கிற கூத்துக்களை நாமே அறிவோம் என்கிற படியால் நாம் மணியன்பிள்ளைக்கு சற்றும் சளைத்தவர்களில்லை. இந்தப்புத்தகமெங்கும் விரவிக்கிடக்கும் துர்சாகசங்களும