சை க்கிள் சறுக்கி தரையில் விழுந்துவிட்டாள் சின்னஞ்சிறுமி. முதல் காயம் முதல் குருதி வீறிட்டு வீறிட்டுக் கதறுகிறாள் மருத்துவத்திற்கு ஒத்துழைக்க வைக்க மூன்றுபேர் சேர்ந்து போராட வேண்டியிருந்தது. காயத்தைத் துடைத்து மருந்திட்டுக் கட்டினேன் அழுகை தேய்ந்து முனகலான போது கட்டுத் துணியைப் பார்த்து ஏனோ "கொக்கு போல் இருக்கு" என்றாள் அப்போதே அந்தக் காயம் எழுந்து பறந்து போவதைக் கண்டேன்.