Skip to main content

Posts

Showing posts from October, 2015

காவியம்

சூம்பிய கால்களுடன் முறுக்கிய கைகளுடன் கோணித்தவாய்ச் சிறுவனொருவன் இந்த இரயில் பெட்டியின் நீண்ட இருக்கையில் கிடக்கிறான். அவன் தலை சீட்டில் உருள்கிறது. ஏனெனில், அதன் மடிக்கு கனத்து விட்டது. கனத்தவள் ஜன்னலோரத்தில் ஓரத்தின் ஓரத்தில் இடுங்கிப் போயிருந்தாள். அவள் வெளியே வெறித்த படி வந்தாள். வெளியே கை விட்டு  காற்றை துழாவினாள். வெளியே தலை நீட்டி அங்குமிங்கும் பார்த்தாள். பாதி உடலை கம்பிக்குள் செருகி இதோ, பறந்து போகிறாள்.

நூல் அறிமுகம்- அந்திமழை இதழில்