பொ டிப் பட்டாம் பூச்சியொன்று ஆவாரஞ்செடியை சுற்றிச் சுற்றி வருகிறது ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்கு ஒரு மலரிலிருந்து இன்னொன்றுக்கு ஒரு இலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறி மாறி அமர்ந்து என்னென்னவோ பேசுகிறது தன்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி கண்ணீர் வடிக்கும் சிறுவனைப் போல அருகிருந்து தேம்புகிறேன் நான்.