Skip to main content

Posts

Showing posts from May, 2024

செழு செழிப்பு

உ ச்சிப் புதர் மறைப்பில் ஒரு பூ குலுக்கம்  பார்த்தேன். அது அணிலோ புள்ளோ வானோ வளியோ அல்ல, நானே தானோ  

பார்த்தாயா?

கு லாவியபடியே  என்னைக் கடந்து செல்கிறார்கள் இரு தோழியர். தோள்களை உரசிக் கொண்டு க்ளூக், க்ளூக் என்று சிரித்துக் கொண்டு மெல்ல மெல்ல  நடந்து செல்கிறார்கள். பார்க்காமல் இருக்க இயலாத காட்சி அது எழ  வேண்டிய தருணத்தில்  சரியாக எழுந்த  வயலின் கீற்று போல் அவர் ஆட்காட்டி விரலிரண்டும் ஒரு சேர எழுந்து  தொட்டுக் கோர்க்கின்றன. " பார்த்தாயா"  என்பது போல் எழுந்து கொண்டிருக்கிறது உதயத்தின் புத்தொளி அவர்கள்  அப்படியே நடந்து நடந்து தூரத்தில் மறைகிறார்கள். நெருங்கி வருகிறது ஒரு இனிய துயர்

இசைக் கலைஞன் ‘போல’ ஆவது எப்படி?

பல்லில் பிரஷ் இடும் தாளம் பிரமாதமாக  இருப்பதை இன்றைய அதிகாலையில் அவதானித்தேன். கொஞ்ச நாட்களாக சப்தங்கள் துல்லியமாகியுள்ளன. இசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட சப்தங்கள் என்று  சொல்வார்கள். எந்தச் சப்தத்தைக் கேட்டாலும் அதை ஒழுங்கு செய்ய முடியுமா? என்று தோன்றத் துவங்கியுள்ளது. பெரிய வித்வான்களுக்கு தோன்ற வேண்டிய  சிந்தனை. எனக்கும் தோன்றுகிறது.  சிந்தனைக்கு விவஸ்தையில்லை... முழு கட்டுரையை வாசிக்க:  https://akazhonline.com/?p=7167 நன்றி:  அகழ்