உளச்சோர்வும், விசனமும், கண்ணீருமான இந்நாளிற்குள் பாம்பொன்று புகுந்து விட்டது. பாம்பின் முன்னே சோர்ந்திருக்கலாகாது; செயலாற்றியாக வேண்டும். பாம்பின் முன்னே கண்ணீர் சிந்த இயலாது; வீறு கொண்டாக வேண்டும். பாம்பைக் கொன்ற பிறகு மகிழாமல் இருப்பது கடினம் பாம்பு கொன்று விட்டாலோ விசனமும் மடிந்துவிடும். உளச்சோர்வும், விசனமும், கண்ணீருமான நாளை பாம்பை விட்டு பளபளக்கச் செய்தீரே, உமக்கு ஸ்தோத்திரம் ஐயா!