இ ளமையின் "போ" என்கிற விரட்டலுக்கும் முதுமையின் "வா" என்கிற அழைப்பிற்கும் இடையே இழுபட்டு வருந்துகிறாள் ஒருத்தி "போகவே மாட்டேன்" என்று கண்ணீர் சிந்தும் அவள் சின்ன ரோஜாக்களை பறித்தெடுத்து சூடிக் கொள்ளத் துவங்கி விட்டாள் முதுமையோ படைபலம் மிக்கது குண்டர்களால் நிறைந்தது. அவர்கள் ஒரு பத்து வருட காலமாக மூச்சிரைக்க முயல்கிறார்கள். ஆயினும் ரோஜாவோடு கூடிய அவளை இளமையிலிருந்து இழுத்தெறிய முடியவில்லை.