பொ றுப்புணர்வின் சக்கரங்களை உருட்டியபடி ஞாயிறு காலையில் வீட்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் ஒருவன் மிச்ச கடலைப் பாக்கெட்டை வீதியில் எறிகிறான் அந்த வெடிகுண்டில் சிதறுகிறது நேற்று. நேற்றில் மலையுச்சி இருந்தது. மந்தமாருதம் தவழ்ந்தது பாலொளி நுரைத்து நுரைத்துப் பொங்கியது. ஆனந்தக் கூத்தில் அகிலமே ஆடியது இன்றின் நேற்றிலோ தலைவலி, குமட்டல், குற்றவுணர்வு, தாளமாட்டாத அருவருப்பு நேற்று கடித்துண்ட காஷ்மீரத்து ஆப்பிளில் இன்று நெளிகின்றன புழுக்கள் சுண்டுவிரலால் இழுத்துச் செல்லப்படும் நீ முஷ்டியைத் தூக்கும் காட்சி ஒரு தமாசு தம்பி...! நேற்றை அப்படிக் கசக்காதே! நேற்றை அப்படி எறியாதே! அடுத்த சனிக்கு இன்னும் ஆறே நாள்தான்.