Skip to main content

Posts

Showing posts from April, 2019

பெரு வாழ்வு

காலுதைத்துக் கதறும் சிறுவனுக்கு நரைப்பதேயில்லை அவன் இன்னும்  இனிப்புப் பண்டத்தின்  முன்னே நகராது அமர்ந்திருக்கிறான். எனக்கோ நாடி தளர்ந்து விட்டது. கைத்தடி எதற்கு? அந்தச் சிறுவனை விரட்டி ஓட்டத்தான். ஆயினும் சும்மானாச்சிக்கே சுத்துகிறேன்.

நீலகண்டம்

                          அதலபாதாளம் உறுமிக் கொண்டிருக்கிறது. சொல்லைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்                  .... பழுக்கக் காய்ச்சிய சொல்லை எடுத்து நெஞ்சில் ஒரு இழு இழுத்தேன்                  ..... கூவி வருகிறதொரு சொல் அதனெதிரே ஆடாது அசையாது உறுதி காத்து நிற்பேன். பிறகு துண்டு துண்டாவேன்.                   .... கடைசிச் சருகும் காற்றில் பறந்த பிறகு சொல்லைச் சொல்லில் கலந்து குடி                                    .... நஞ்சு திரண்டுவிட்டது. சொல்லே நீலகண்டன்.                         

மகிழ்ச்சியை ஆக்குதல்

வெய்யில் வணக்கிய தேகம் கசங்கி நாறும் உடை சடை திரண்ட தலை பாழ் கிணற்றுக் கண்கள் படைத்தோன் நாணும் சிரிப்பு ரோட்டோரம் கிடக்கும் காலிப்புட்டியை ஆட்டி ஆட்டி ஒரு துளியாக்கி அதை நாக்கை நீட்டி ஏந்திப் பிழைக்கும் பேறு