Skip to main content

Posts

Showing posts from June, 2019

அற்புதம்

அம்மி பறக்கும் ஆடியில் காற்றேக்கெதிரே போய்க் கொண்டிருந்தேன். காற்று என் ஹெல்மெட்டை அடித்துப் போய் விட்டது. அம்மி என் தலையை .

தொங்குவன

நின்ற கோலம் அமர்ந்த கோலம் கிடந்த கோலம் என எழிற்கோலம்   பல இருக்க நம்மைத் தொங்கும் கோலத்தில் வார்த்தது எவன்? நீரில் வாழ்வன நிலத்தில் வாழ்வன போல் நண்பா... நாம் வாழ்வில் தொங்குவனவா?

தெய்வதம்

          சிவராசண்ணனை லாரி தூக்கி வீசி விட்டது. " ப்ரே பண்ணிக்குங்க அங்கிள்..." போனில் அழுகிறாள் அவர் மகள். அப்போதுதான் உறைத்தது எனக்கு மண்டியிட ஒரு தெய்வமில்லை என்பது. ஆனாலும் மண்டியிட்டே ஆக வேண்டும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் அதையே சொல்கிறார்கள். சிவராசண்ணன் நாளிரண்டு முறைகள் ஓய்வாக நின்று, ஆனந்தமாக புகைபிடிப்பாரே அந்த மே ஃப்ளவர் மரத்தடிக்கு ஓடினேன். அதன் முன் மண்டியிட்டேன்.

திருநாள்

உச்சியில் இருந்து எல்லாவற்றையும் பார்க்கிறது நிலவு. அதன் மனம் தேய்ந்து தேய்ந்து இல்லாமல் ஆகும் திருநாளை பெளர்ணமி என்பர் உலகத்தார்.         நன்றி : காலச்சுவடு -  ஜூன்19

நல்லதொரு பெயர் சொல்லுங்கள்

உணவை நீட்டி ஏந்தும் ஓடு  அது திருவோடு எல்லாவற்றையும் ஏந்தத் துடிக்கும் ஓடொன்றுண்டு என்னிடத்தே என்னதான் பெயரிடுவேன் அதற்கு?            நன்றி : காலச்சுவடு - ஜூன் -   19

செல்ஃபி

உள்ளத்தைத் திறந்து வைத்தால் கெட்ட நாற்றம் எழுகிறது உலகம் மூக்கைப் பிடித்துக் கொள்ளும்படி  பிறகு அது முடைநாற்றம் கொள்கிறது நட்சத்திரங்கள் என் கேட்டில் மங்கிவிடுகின்றன. ஆற்றுமீன்கள் எவ்வளவு ஆழத்தில் ஒளியமுடியுமோ அவ்வளவு ஆழத்தில் ஒளிந்து கொள்கின்றன. பூனை தன் "ம்யாவை" நிறுத்திக் கொள்கிறது. எங்கெங்கு காணினும் நான். அவசரவசரமாக உள்ளத்தை அள்ளி ஒரு கோணிப் பையுள் திணித்துக் கட்டினேன். நீண்டதொரு பெருமூச்சிற்குப் பிறகு ஒரு செல்ஃபி எடுத்தால் தேவலாம் என்றிருந்தது. அதில் நான் சிரிக்கிறேன் பளீர் பற்களோடு. இனிமை ததும்ப நலமே சூழ.          நன்றி : காலச்சுவடு - ஜுன்-19