துருவேறிய சைக்கிளில் மேற்கிலிருந்து கிழக்காக வந்தார் ஆஸ்துமா பீடித்த ஒரு கிழவர். புதுயுகத்து ஊர்தியில் புத்திளைஞனொருவன் கிழக்கிலிருந்து மேற்காக போனான். தவறி விழும் மூச்சுக்களை அள்ளிப்பிடித்த படியே தூக்கிக் கொண்டிருக்கும் சைடுஸ்டேண்டுக்கு சைகை செய்தார் கிழவர். அப்போது அவர் தலைக்கு மேல் நின்றிருந்த மஞ்சரளி செடிக்கு ஒரு குடம் நீர் வார்க்கப்பட்டது அப்போதே ஒரு பூவும் பூத்தது. அந்த சைடுஸ்டேண்ட் மலருக்கு சாட்சிமலர் நான். நன்றி : ஆனந்தவிகடன்