"உ யிரின் சுபாவம் ஆனந்தம்" என்கிறான் தேவதேவன். பார்க்கப் பளபளக்கும் ஒரு வரி இது தென்படும் ஒவ்வொரு மனிதனிடமும் வினவுகிறேன்.. "ஆனந்தத்தைப் பார்த்தாயா?" அதன் அங்க அடையாளங்களை வினவுகிறான் அவன் நானும் பார்த்ததில்லை பார்த்தவர்களைப் பார்த்துவிட்டால் கூட போதும் கண்ணைக் கொஞ்சம் மூடினால் கண்டுவிடலாம் காதைக் கொஞ்சம் மூடினால் கேட்டு விடலாம் பாவம், நம்மால் அது முடியாது. ஆனந்தம் மனிதனின் ஆறடிக்கு மேல் அறுபதடி உயரத்தில் இருக்கிறது உயிரின் சுபாவம் கிளுகிளுப்பு ஆனால், அதைச் சொல்ல மாட்டான் தேவதேவன். நன்றி; காலம்- 60