Skip to main content

Posts

இசை கவிதைகள் - அகழ்

ந ல்லதங்கா கழிவறைக் கதவை இழுத்துச் சாத்திக் கொள்வது வசதியானது தண்ணீர் குழாயை திறந்து விடுவது மேலும் வசதியானது ஆனால் வெட்ட வெளியின் மத்தியில் அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி பெண்களின் கண்ணீர் என்பது ஒரு தனியூத்து இங்கு நான் காண்பது அதன் சில துளிகள் ஒருத்தி அழத்துவங்கியவுடன் அபலை ஆகிவிடுகிறாள் அங்கு அப்போதே முளைத்து விடுகிறது ஒரு கிணறு “ தொப்” சத்தமே அப்பாலே போ! கா தலரே… காய்பவரே… முறுக்கிப் பிழியப்பட்டு பலகாரக் கடையில் அடுக்கப்பட்டுள்ள ஜிலேபித் துண்டு போல் ஆகிவிட்டேன் திடீரென்று யாரும் எடுத்து விண்டு விழுங்கலாம் எந்தத் தொண்டையிலும் நழுவி விழுவேன் குளு குளுவென ம்… சீக்கிரம்… இந்தச் சலுகை எத்தனை மணித்துளிகளுக்கென்று எனக்கே தெரியாது ஆகட்டும்.. சீக்கிரம்.. சீக்கிரம்… ப ணி செய்து கிடத்தல் துப்புரவுப் பணியாளர்கள் பணி முடித்து ஓய்வில் இருக்கிறார்கள் ஒருவர் கடைவாய் ஒழுக வெற்றிலை மென்று கொண்டிருக்கிறார் ஒருவர் போனில் சத்தமாகச் சிரித்த படியிருக்கிறார் அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருவரையொருவர் துரத்தி விளையாடுகிறார்கள் இளம் பெண்கள் இதை ஓய்வென்று நம்பவில்லை நான் இப்போது உலகின் ஏதோ ஒரு மூலை துப்புரவாகி
Recent posts

களிநெல்லிக்கனி- ஏற்புரை

நவீனக் கவிதை வாசகர்கள் பலருக்கும் நமது பழந்தமிழ் கவிதைகள் குறித்த வாசிப்பு குறைவுதான். அதற்கு ‘பழையது பயனற்றது ‘என்கிற மேலோட்டமான எண்ணம் முதன்மையான காரணம். நவீன மனிதனின் சிக்கல்களுக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறோம். புதிய மனிதனின் புதிய சிக்கல்கள் என்று ஒவ்வொரு காலத்திலும் சில இருந்து வந்துள்ளன. அவை அந்தந்தக் காலத்து கவிதைகளில் பிரதிபலித்தும் வந்துள்ளன. இந்த ஆண்ட்ராய்டு காலத்து மனிதனின் கவிதைகளில் வீடியோ காலும், வாய்ஸ் மேசேஜும் வர வேண்டும். கட்டாயம் வந்தாக வேண்டும். ஒரு புரட்சி போல அல்ல, இயல்பாகவே அவை வந்தாக வேண்டுமல்லவா? புதிய மனிதனுக்கு சில புதிய சிக்கல்கள் இருப்பது போலவே, ஒரு மனிதனுக்கு என்றென்றைக்குமான சிக்கல்கள் என்று சில உண்டு. பசி, காமம், அச்சம், பொறாமை இப்படி சில. நெருப்பைக் கண்டு பயந்து, வியந்து வணக்கத் தொடங்கிய மனிதன் இன்றுவரை எத்தனையோ விதவிதமான கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு மீறிய ஒன்றுக்கு அஞ்சுபனாகவும், அதை வணங்கிப் பணிபவனாகவும், அதற்கு நன்றி சொல்பவனாகவும் அவன் எப்போதும் இருந்து வந்துள்ளான். நமது பழந்தமிழ்க் கவிதைகளில் நாம் கா

இசையின்‌ "உடைந்து எழும்‌ நறுமணம்‌" - சாம்சன்

சங்கப்பாடல்களின்‌ வயது இரண்டாயிரத்து சொச்சம்‌. அபூர்வ சொற்சித்திரங்களோடும்‌ ஆழ்ந்த படிமங்களோடும்‌ வார்க்கப்பட்ட விழுமிய ஆபரணம்‌. கவித்துவத்தால்‌ செதுக்கப்பட்ட அந்த தேரை வடம்‌ பிடித்து நவீனகாலம்‌ வரை கொண்டு வந்து சேர்த்திருப்பது ஒரு வகையில்‌ நமக்கு வாய்த்த பேறு. மரபை உடைத்து நா.பிச்சமூர்த்தியின்‌ 'பெட்டிக்கடை நாராயணன்‌’ கவிதை நவீனகவிதைக்கு அச்சாரமானது. எழுபதுகளில்‌ அதன்‌ உக்கிரம்‌ வலுப்பெற்றது. நவீன கவிதைகள்‌ வெவ்வேறு பரிமாணங்களில்‌ கச்சிதமான உத்திகளோடு புதிய தரிசனங்களை இன்று அசலாக பெற்றிருக்கின்றன. அழகியல்‌ மற்றும்‌ எதிர்‌ அழகியல்‌ தன்மைகளோடு சுண்டக்காய்ச்சிய கவிதைகளை எழுதிவரும்‌ கவிகளுள்‌ கவிஞர்‌ இசை முக்கியமானவர்‌. கடந்தகாலத்தில்‌ பகடி ஆட்டத்தை நிகழ்த்தியவர்‌ இந்த முறை அதிலிருந்து சற்று விலகி தன்னை குவியாடியாக்கி அக தரிசனங்களில்‌ மெளனித்துக்‌ கிடக்கிறார்‌. காலந்தோரும்‌ தன்‌ ஆத்மாவை கூர்‌ செய்து கொண்டே இருப்பவன்தான்‌ உன்னதக்‌ கலைஞனாக உருமாற்றமும்‌ கொள்கிறான்‌. நவீன கவிதைகள்‌ படிமம்‌, உவமை மற்றும்‌ உருவகத்தால்‌ திளைத்தவை. இசையின்‌ கவிதைகள்‌ காட்சி படிமத்தால்‌ விரிபவை. பெரும்பான்மைய

நெஞ்சின் மீது போனை அணைத்துக் கொண்டு

  நீ விட்டுவிட்டுச் சென்ற பிறகு என்னோடே தங்கிவிட்டன  உன் குரல்கள் எல்லாவற்றையும் அப்படி ஒருசேர  மூட்டை  கட்டிவிட முடியாது நெஞ்சின் மீது போனை அணைத்துக் கொண்டு உன் குரல்களை ஒலிக்க விடுகிறேன் அவை உன்னை விடவும்  அதிகமான நீ  நீ இல்லையென்றான பிறகு உன் பேச்சு  பாதி பாட்டாகி விட்டது நினைவென்றாலே அது கண்ணீர் தானே? இந்த இரவில் கன்னங்களில் வழிந்திறங்கும் கண்ணீர் மீதிப் பேச்சையும்  கரைத்துக் கொண்டு ஓடுகிறது இப்போது நீ ஒரு முழுப்பாடல் இந்த உலகில்  சங்கீதங்கள்  இப்படியா, இப்படியா உருவாகின்றன அன்பே

உயிர்மை இதழில் ஒரு நேர்காணல்

அந்தியின்  முன்  நிற்பதும்,  காதலின் முன் நிற்பதும் ஒன்றுதான் சந்திப்பு : சோ. விஜய குமார் உங்கள் படைப்பு மனதை உருவாக்கிய முதல் திறப்புகள் எவை? வாழ்வின் எந்தப் பாதைகளின் வழியே சொற்களை நாடி வந்தீர்கள்? “அங்கு கத்தும் குயிலோசை சற்றே  வந்து காதில் பட வேணும்” என்கிற வரி டேப் ரிக்கார்டரில் ஓடி முடிந்தது. தலை சீவிக் கொண்டிருந்த அப்பா அலங்காரத்தை நிறுத்தி விட்டு ” சற்றே” -  ன்னு எழுதுனாம் பாரு.... அதனாலதான் அவன மகாகவிங்கறாங்க..” என்றார்.  பிறகு மந்திரத்தை முனகுவது போல அந்த ‘ சற்றே’ யை முனகிக் கொண்டே இருந்தார். நான் முதன்முதலில் சொல் முன் திகைத்த தருணம் அதுதான் என்று நினைக்கிறேன். கவிஞனால் காணி நிலத்தை உருவாக்கி அதில் குயிலைக் கூவச் செய்வதோடு மட்டுமல்லாமல் அந்தச் குயிலிற்கும், காதிற்குமான தூரத்தையும் எழுத முடியும் என்கிற வியப்பு  அப்போது பள்ளிச் சிறுவனான என்னை இறுகப் பற்றிக் கொண்டது என்று நினைக்கிறேன். அப்பா ‘கவிஞர் ‘ என்கிற முன்னொட்டுக்கு ஏங்குபவர் என்பதால் கவிதை என்கிற சொல் வீட்டில் புழங்கி வந்த ஒன்றுதான்.  ‘கவிஞரே! “  என்று அழைத்தால் அவர் ஒரு சிரி சிரிப்பார். அது , அப்படி அழைத்தால் மட்டுமே வ

இதை நான் நம்புகிறேன்

  அ ம்மா.... அம்மா... அம்மா... என்று  ஒரு உயிர்  உள்ளுக்குள் அழுதபடி அமர்ந்திருக்கையில் அகத்திக்கீரை இலை ஒன்று முகம் திருப்பிப் பார்க்கும் இதை நான் நம்புகிறேன் அதனால் ஒன்றுமே செய்ய முடியாத போதும்

இசை கவிதைகள்

  1 மே லோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு ஒரு உடையிலிருந்து இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல ட்ரவுசருக்கு மாறுவது ட்ரவுசருக்கு மாறுகையில் நான் தயாராகிறேன் எதற்கென்றால் எல்லாவற்றிற்கும் உறக்கத்திற்கு போர்க்களத்திற்கு எல்லாவற்றிற்கும் ட்ரவுசர் அணிந்தவுடன் சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள் மேலோட்டமான நம்பிக்கைகளில் வாழ்ந்து வருபவர்கள் அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை சுற்றுலா செல்கையில் ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு ட்ரவுசர் ஒரு சுற்றுலா என்பாரும் உண்டு ட்ரவுசரில் இருக்கையில் நான் என் காதலி அதை அளக்க முடியாது என்பது போலவே சுருக்கவும் முடியாது ட்ரவுசரை காற்றோட்டம் என்பது மூடர் தம் சுருக்கம் 2 அ ங்கு வாத்தியக்காரன் வாத்தியத்திலிருந்து கையைத் தூக்கிவிடும் போது உருவாகும் தாளமே! நீ அங்கென்னைக் கூட்டிச்செல்! 3 த மிழ் மலர்கள் அது ஒரு சின்னத் தோட்டம் அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள். இன்று புதிதாக அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள் “அருமலர் எழிலகம்” அதில் இனிமேல்தான் பூக்கள் வர இருக்கின்றன. அதற்குள் பூத்துக் குலுங்கிவிட்டன. 4 தே ங்கெண்ணெய் “அம்மா…” என்று கூவியபடி முதல் மு