கபிலர் கவித்துவத்திரட்டு தொடரில் ' கலித்தொகை' பாடல்கள் துவங்கியுள்ளன. கபிலரின் கவித்துவ உச்சங்கள் நிகழ்ந்துள்ள நூல் என்று கலித்தொகையைச் சொல்லலாம். வரிக்கு வரி அடிக்கோடிட வேண்டிய பல பாடல்களைக் கொண்டது. நாடகத்தன்மையின் சுவாரஸ்யம் நிரம்பியது. இத்தொடரில் இதுவரை வெளியான கட்டுரைகளில் இதுவே சிறந்தது என்பது என் எண்ணம். காரணம், கட்டுரையாளன் அல்ல, கவிஞன். "நாணத்தை நடிக்க முடியுமா?" இணைப்பு : https://akazhonline.com/?p=12972 https://akazhonline.com/?p=12972 நன்றி அகழ்!
இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச் சுட்டி அதைப் படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில் ஆரம்பப் பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...