Skip to main content

Posts

முதல் ரவுண்டு

  லே சாக தோள்பற்றி தனது வளரிளம் பிள்ளையது வாகனத்தின் பின்னிருக்கையில் முதன்முதலாக அமர்ந்து போகிறாள்  ஓர் அன்னை. அந்த முகத்திற்குச் சொல்ல ஓர்  உவமையில்லை. அவள் ஏறி அமர இதை விட  இன்னொரு இருக்கையுமில்லை.
Recent posts

கருரோஸ்

  சி த்தி விநாயகர் முன் அமர்ந்திருக்கிறேன் வேண்டுதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன நீராட்டும் பொருட்டு  ஒவ்வொரு அலங்காரமாக அழித்து வருகிறார்கள். தலைப்பாகை நீக்கி ஆடைகள் களைந்து எண்ணெய்ச் ஜொலிப்பின் மீது  ஒரு குடம் நீரை வாரி ஊற்றினார்கள். முழுக்கருப்பின் முன் அமர்ந்திருக்கிறேன் ஒரு கிள்ளுச் செவ்வரளி ஏந்தி பக்தையொருத்தி வந்து சேர்ந்தாள் இப்போது மின்கருப்பின் உச்சியில் சின்னஞ்சிறு இளஞ்சிவப்பு இது  நான் வேண்டிக் கொண்டிருந்த தெய்வம் அல்ல. தெய்வங்கள் குறுக்கிடாத தெய்வதம்.

பிரமாதமான விபத்து- சக்திவேல்

  அன்புள்ள இசைக்கு என் பெயர் சக்திவேல். முன்பு உங்களுடைய வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் கவிதை தொகுப்பை வாசித்து கடிதம் எழுதியிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர் என அறிமுகப்படுத்தி கொண்டேன் - கடிதத்தில் தான். சென்ற டிசம்பரில் நடந்த விஷ்ணுபுரம் விழாவில் உங்களை பார்க்க முடிந்தது. சனிக்கிழமை நண்பகல் நேர இடைவெளி பொழுதில் ஆங்கில பதிப்பு முகவர் கனிஷ்கா குப்தா அவர்களிடம் எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன், அஜிதன், விஷால் ராஜா என அரங்கின் நடுவில் வட்டமாக அமர்ந்து உரையாடி கொண்டிருந்தார்கள். நான் சக்கர நாற்காலியில் வந்து சேர்ந்து கொண்டேன். நீங்கள் எனக்கு எதிர்புறமாக இரண்டு நண்பர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்தீர்கள். எனக்கு உங்களுடைய வாசகன் என்று அறிமுகப்படுத்தி கொள்ள ஆவலாய் இருந்தது. ஆனால் அந்நேரம் பார்த்து உங்கள் கவிதைகளோ, அவை பற்றிய எண்ணங்களோ எதுவுமே மனதில் இல்லை. இதற்காக உங்கள் கவிதைகளை படிக்காதவன் என முடிவு செய்யாதீர்கள். உங்கள் கவிதைகள் கொடுத்த உணர்ச்சிகரத்தை மட்டுமே அப்போது என்னிடம் தெளிவாக இருந்தது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே தயங்கி தயங்கி விட்டுவிட்டேன். அண்மையில் ஜெ தளத்தில் தங

ஆசையில் படுதல்

  நா ன் பலஹீனமான கவிதைகளை எழுத ஆசைப்படுகிறேன். அகராதிப் பூச்சிகள் அப்படியே ஆழ்ந்து ஊரும் படிக்கு அடுக்குமாடிக் கட்டிடங்களை கட்டி எழுப்புவது போல் ராட்சத இயந்திரங்கள் உறுமிக் கதறாதபடிக்கு  உள்ளதிலேயே வலுவான சொல்லின் தலையில் ஆணியடித்து என் கவிதையைத் தொங்க விடாதபடிக்கு ஒவ்வொரு சொல்லாக எடுத்துப் புரட்டி அதனடியில் ஒருவர் எதையெதையோ தேடும் படிக்கு தொட்டால் சரிந்துவிடும்படிக்கு "எங்கு தொடுவேன்... " என்று  என் வாசகர் ஆனந்தத்தில் திகைக்கும்படிக்கு.

பனிக்கடு பருவம்

கு ழந்தைக்கு கன்னத்தைக் காட்டுவது போலே வெய்யிலுக்குக் காட்டிக் கொண்டு நிற்கிறாள் ஒருத்தி  கிண்ணத்திலிருந்து சந்தனத்தை அள்ளுவது போல் வெய்யிலை அள்ளி மெல்ல மெல்ல மெழுகுகிறாள் வதனமெங்கும் ஊர்ந்து ஊர்ந்து கொஞ்சுகிறது கதிரொளி  வேறொரு பனிக்குள்ளிருந்து வெளிவந்து முதல் வெய்யிலில் கரைந்து கொண்டிருக்கிறாள்

அருளழகு

  தீ பச்சுடரை கைகளால் ஒற்றி அதன் உஷ்ணக் கொழுந்தை கண்களில்  படரவிடுகையில் நானெங்கும் நீ நிறைகிறாய்.

உணவுத் திருவிழா

  டி ராக்டர் உழத்துவங்குகிறது. நாரை ஒன்று தரையிறங்கியது புழு வேண்டி. இரண்டாகி நான்காகி பத்தாகி நாரைத் திரள் இப்போது. ராட்சத டயர்களை மறந்து முன்னும் பின்னும்   கொஞ்சுவது போல் கொத்திக் கொண்டு திரிகின்றன.  ஒரே ஒரு நாயகி அவளை மோகித்து அணையும் பெருங்காதல் கூட்டம் டிராக்டர் உழுதுவிளையாட நாரை உண்டு விளையாட துவங்கி விட்டது ஒரு சிவப்பு வெள்ளைத் திருவிழா