உனது லட்சணம் இந்த முறை “போகிறேன்..” என்பதை அவ்வளவு திடமான குரலில் சொன்னாள் போய்விடுவாள்தான் போல? எழுந்தவள் எட்டு வைத்து நடக்கிறாள் பின்னோக்கி… பின்னோக்கி… உச்சிவெயிலில் மொட்டைப் பாறையில் நன்றாகச் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு ஆயுளுக்கும் அசையாத கதியில் அங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்? காலிப்பொன் கனத்த செல்வமென கொஞ்ச காலம் உன்னை என் கைகளில் ஏந்தியிருந்தேன். இந்தக் கைகளில்.. இதே கைகளில்.. காலியாகிக் கிடக்கிற இதே கைகளில் இப்பவும் இவைதான் வெறுங்கைகள் ஆகுமோ ? கனத்த செல்வம் சுடர்ந்த கைகள் இளம் இசை மாணவனின் புத்துலகு நான்குமுனைச் சந்திப்பின் மூலையில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி ‘ரி’ யிலேயே நின்று கொண்டிருப்பார் அறிஞர் அண்ணா விளையாட்டுச் சிறுவர்கள் தூண்களுக்குப் பின்னே மறைந்து கொண்டு சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் ‘பதநி ‘ டுமீல் , டுமீல் என்று வெடிக்கின்றன. அந்தப் படகு ‘ஸரிகம’ வில் ஏறி ‘ஸ்நிதப’ வில் இறங்குகிறது ஒருவன் இன்னொருவனின் முகத்துக்கு நேரே ‘க’ வை நீட்டி வசை மொழிகிறான் ‘ க’ வை அவ்வளவு நெருக்கத்தில் கண்டவனின் கண்கள் இரத்தமாகின்றன. சப்தம் முடக்கப்பட்ட கலவிப் படத்தில் கவ்வி இழுத்து மெல்...
அ வருக்கு 7 பற்களை கட்டாயம் அகற்றியாக வேண்டும் இரண்டு தவணைகளில் என்பது ஒரு சின்ன சலுகை. அவருக்குத் தேக பலமில்லை செல்வ வளமில்லை. அம்மா இறந்து போய் ஆண்டுகள் இருபது ஆகிவிட்டன வந்த அம்மாக்களோ சென்று விட்டனர் ‘வெடுக்’ , ‘வெடுக்’ என்கிற வலியைத் தவிர இப்போது அவருடன் வேறு ஒருவருமில்லை பற்றும் கரங்கள் அற்றவருக்கு தவறும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை கடைவாய்ப் பஞ்சைத் தாண்டி குருதி வெளியே கொட்டினால் அதைத் துடைக்க கொள்ள அவரது இரண்டு கைகளும் நலமுடன்தான் திகழ்கின்றன. எளிதில் அசைந்து தராத பல்லை குறடால் அழுத்தி வலு திரட்டி இழுக்கையில் நினைத்துக் கொள்வதற்கென்றே அவருக்குச் சில நினைவுகள் உண்டு ஆகவே அவர் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை