ந ல்லதங்கா கழிவறைக் கதவை இழுத்துச் சாத்திக் கொள்வது வசதியானது தண்ணீர் குழாயை திறந்து விடுவது மேலும் வசதியானது ஆனால் வெட்ட வெளியின் மத்தியில் அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி பெண்களின் கண்ணீர் என்பது ஒரு தனியூத்து இங்கு நான் காண்பது அதன் சில துளிகள் ஒருத்தி அழத்துவங்கியவுடன் அபலை ஆகிவிடுகிறாள் அங்கு அப்போதே முளைத்து விடுகிறது ஒரு கிணறு “ தொப்” சத்தமே அப்பாலே போ! கா தலரே… காய்பவரே… முறுக்கிப் பிழியப்பட்டு பலகாரக் கடையில் அடுக்கப்பட்டுள்ள ஜிலேபித் துண்டு போல் ஆகிவிட்டேன் திடீரென்று யாரும் எடுத்து விண்டு விழுங்கலாம் எந்தத் தொண்டையிலும் நழுவி விழுவேன் குளு குளுவென ம்… சீக்கிரம்… இந்தச் சலுகை எத்தனை மணித்துளிகளுக்கென்று எனக்கே தெரியாது ஆகட்டும்.. சீக்கிரம்.. சீக்கிரம்… ப ணி செய்து கிடத்தல் துப்புரவுப் பணியாளர்கள் பணி முடித்து ஓய்வில் இருக்கிறார்கள் ஒருவர் கடைவாய் ஒழுக வெற்றிலை மென்று கொண்டிருக்கிறார் ஒருவர் போனில் சத்தமாகச் சிரித்த படியிருக்கிறார் அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருவரையொருவர் துரத்தி விளையாடுகிறார்கள் இளம் பெண்கள் இதை ஓய்வென்று நம்பவில்லை நான் இப்போது உலகின் ஏதோ ஒரு மூலை துப்புரவாகி
நவீனக் கவிதை வாசகர்கள் பலருக்கும் நமது பழந்தமிழ் கவிதைகள் குறித்த வாசிப்பு குறைவுதான். அதற்கு ‘பழையது பயனற்றது ‘என்கிற மேலோட்டமான எண்ணம் முதன்மையான காரணம். நவீன மனிதனின் சிக்கல்களுக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறோம். புதிய மனிதனின் புதிய சிக்கல்கள் என்று ஒவ்வொரு காலத்திலும் சில இருந்து வந்துள்ளன. அவை அந்தந்தக் காலத்து கவிதைகளில் பிரதிபலித்தும் வந்துள்ளன. இந்த ஆண்ட்ராய்டு காலத்து மனிதனின் கவிதைகளில் வீடியோ காலும், வாய்ஸ் மேசேஜும் வர வேண்டும். கட்டாயம் வந்தாக வேண்டும். ஒரு புரட்சி போல அல்ல, இயல்பாகவே அவை வந்தாக வேண்டுமல்லவா? புதிய மனிதனுக்கு சில புதிய சிக்கல்கள் இருப்பது போலவே, ஒரு மனிதனுக்கு என்றென்றைக்குமான சிக்கல்கள் என்று சில உண்டு. பசி, காமம், அச்சம், பொறாமை இப்படி சில. நெருப்பைக் கண்டு பயந்து, வியந்து வணக்கத் தொடங்கிய மனிதன் இன்றுவரை எத்தனையோ விதவிதமான கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு மீறிய ஒன்றுக்கு அஞ்சுபனாகவும், அதை வணங்கிப் பணிபவனாகவும், அதற்கு நன்றி சொல்பவனாகவும் அவன் எப்போதும் இருந்து வந்துள்ளான். நமது பழந்தமிழ்க் கவிதைகளில் நாம் கா