கபிலர் கவித்துவத்திரட்டின் நான்காவது கட்டுரை அகழ் இதழில் இன்று வெளியாகியுள்ளது. பிரிந்து செல்வோர் ஏன் திரும்பிப் பார்க்கிறார்கள்? பச்சைப் புண்ணுள் கூரியதைச் செலுத்தி, பெருகும் குருதியைக் காண்பதில் அப்படி என்ன ஆனந்தம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே உள்ளது https://akazhonline.com/?p=11732
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!