இரைச்சலும் குழப்பமும் நீங்காத சந்தைக்கடைத் தெருவில் அமர்ந்துள்ளது ஒரு நாய் அவ்வளவு அழகாக அவ்வளவு கம்பீரத்தோடு "எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்கிற காவலோடு. நான் அதையே நெடுநேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தேன் அதே நாயின் சாயலில் இன்னொரு நாய் தெரிந்தது. அது பூமிப்பந்தின் முகப்பில் அமர்ந்துள்ளது. அதே பாவனையோடு அதே உறுதிமொழியோடு உள்ளே நாம் மனம் ஓய்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறோம். |
Comments