Skip to main content

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

 


மாம், அப்படித்தான்

கேவலன்தான்

பரதேசி தெருத் தெருவாக 

அலைவது போலே

முகநூல் முழுக்கத் திரிவேன்.

குப்பை மேட்டின் முன் குந்தி

அதைக் கிளறிக் கிளறி  

ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம் 

அது  கூட நான்தான்.

சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து

ஒன்றுவிடாமல்  துப்பறிவேன்

என்னைத் தவிர 

எனக்கு எல்லார் மேலும் சந்தேகம்

உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் 

ஆகவே

முதலில்

அவர்களிடமிருந்தே துவங்குவேன்

அங்கு

நீ இட்ட இதயக்குறி ஒன்று

சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் .

அப்போது

நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்..

“ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்".

அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும்

“நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".


Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.