Skip to main content

Posts

Showing posts from March, 2026

செம்மறு என்கிற இரத்தக்கறை- கபிலர் கவித்துவத் திரட்டு

“போர் படு மள்ளர்” என்கிற சொற்றொடர்க்கு போர் வீரர்கள், போர் செய்யும் மள்ளர்கள் என்று பொருள் சொல்லலாம். ஆனால் நம் உரையாசிரியர்கள் “போரில் அல்லாமல் பிறவகையில் இறத்தலை விரும்பாத” என்றே உரை சொல்கிறார்கள். “படு” என்கிற சொல் அந்த உரைக்கு பொருத்தமாகவும்தான் இருக்கிறது. என்னதான் வீரமறக்குலத் தோன்றல் என்றாலுமே, ஒரு உயிர் அப்படி விரும்புமா என்பது குறித்து எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உள்ளது. “அவ்வளவு சந்தேகத்தோட நீ என்ன மயித்துக்குடா என் பாட்டனின் இலக்கியத்த பாடுற..?” என்று “இடும்பாவனம் கார்த்தி” கர்ஜிக்கும் ஓசைவேறு என் காதில் கேட்கிறது. முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே உள்ளது https://akazhonline.com/?p=11501

பவனி!

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!