இன்று அதிகாலைத் தூக்கத்துள்
வந்து விழுந்தது ஒரு தொலைபேசி அழைப்பு.
எழுந்து வாசலுக்கு வந்தேன்.
அங்கு ஒரு பெரிய முட்டக்கோழி நின்று கொண்டிருந்தது.
அதற்கு அப்புறம் உலகமே தெரியவில்லை.
சிலசமயம் அது அப்படியும் இப்படியுமாய் அசைந்தாடுவது
நிச்சயம் ஒரு கேலிநடனம்.
எப்போது வேண்டுமானாலும் யார் வீட்டு வாசலிலும்
உருண்டு வந்து நிற்கலாம் ஒரு முட்டக்கோழி.
என் தாத்தா கடவுளை செருப்பால் அடித்திருக்கிறார்.
எனவே நான் கடவுளின் அதிகாரத்திற்க்கு
பயப்படுவதில்லை.
ஆனால் தாவாக்கொட்டையில் மயிர்வளர்க்கும்
எத்தனையோ பேர் தோன்றி
என்னென்னவோ சொன்னபோதிலும்
முட்டக்கோழியின் அதிகாரத்தை உடைத்தெரிய முடியவில்லை.
நான் முட்டக்கோழிக்கு அஞ்சுகிறேன்
அதைப் பணிந்து வணங்குகிறேன்
முட்டக்கோழியே! என்னை விட்டு விடு
வந்து விழுந்தது ஒரு தொலைபேசி அழைப்பு.
எழுந்து வாசலுக்கு வந்தேன்.
அங்கு ஒரு பெரிய முட்டக்கோழி நின்று கொண்டிருந்தது.
அதற்கு அப்புறம் உலகமே தெரியவில்லை.
சிலசமயம் அது அப்படியும் இப்படியுமாய் அசைந்தாடுவது
நிச்சயம் ஒரு கேலிநடனம்.
எப்போது வேண்டுமானாலும் யார் வீட்டு வாசலிலும்
உருண்டு வந்து நிற்கலாம் ஒரு முட்டக்கோழி.
என் தாத்தா கடவுளை செருப்பால் அடித்திருக்கிறார்.
எனவே நான் கடவுளின் அதிகாரத்திற்க்கு
பயப்படுவதில்லை.
ஆனால் தாவாக்கொட்டையில் மயிர்வளர்க்கும்
எத்தனையோ பேர் தோன்றி
என்னென்னவோ சொன்னபோதிலும்
முட்டக்கோழியின் அதிகாரத்தை உடைத்தெரிய முடியவில்லை.
நான் முட்டக்கோழிக்கு அஞ்சுகிறேன்
அதைப் பணிந்து வணங்குகிறேன்
முட்டக்கோழியே! என்னை விட்டு விடு
Comments