Skip to main content

வானம் - நீலம்

வானம் சிக்னலில் சிக்கிக் கொண்டது.
ஒரு பிச்சைக்கார சிறுமி
அதை நெருங்கி வந்து பிச்சை கேட்கிறாள்.
வானம் சிவப்பு விளக்கை வெறித்துக் கொண்டு நிற்கிறது.
அவள் தொட்டு தொட்டு நச்சரிக்க
எரிச்சலில்
ஃபேண்ட் பாக்கெட்டில் திணித்திருந்த பர்ஸை எடுத்து
அதில் சில்லரைகளைத் தேடியது.
அவை எங்கோ இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்தன.
எனவே வானம்
பர்ஸை ஒரு குலுக்கு குலுக்கியது
அப்போது உள்ளிருந்து தெறித்து விழுந்தது ஒரு யோனி.
கடவுள் கிருபையால் சிக்னல் எடுக்க
இன்னும் பத்து வினாடிகள் இருந்தன.
பதறித் துடித்த அது ஐந்து வினாடிகளுக்குள்
தவறவிட்டதை கைப்பற்றி விட்டது.
அருகிருந்த பேக்கரியில் தண்ணீர் பாட்டில் வாங்கி
அதை நன்றாக அலசி
தன் கர்ச்சீப்பால் துடைத்து உலர்த்தி
மீண்டும் பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டு கிளம்பியது.

நீலம் வழக்கமாக போகும் பேருந்தில்
இன்று கூட்டம் அதிகம்.
நிற்க கூட இடம் இல்லை.
எனவே அது ஒற்றைக் காலில் பயணித்தது.
உணவு இடைவேளையில்
பையை திறந்து பார்த்தால்
சாம்பார் டப்பாவும், தயிர் கிண்ணமும்
கழன்று பை முழுக்க சிந்தியிருந்தது.
அதன் ஈரமும் நாற்றமும் அதற்கு எரிச்சலூட்டியது.
அது அவசர அவசரமாக பையில் இருந்த பொருட்களை
எடுத்துப் பார்த்தது.
எல்லாவற்றிலும் ஈரம் படர்ந்திருந்த்து.
நல்ல வேளையாக
ஒரு தனிஅறையில்
பிளாஸ்டிக் கவருள் வைத்து
பத்திரமாக பின்னடிக்கப்பட்டிருந்த கறுத்த குறிக்கு
எதுவும் நேர்ந்திருக்கவில்லை.
அதை மட்டும் எடுத்து
தன் பிரத்யேக லாக்கரில் வைத்து பூட்டி விட்டு
நனைந்த பொருட்களையெல்லாம் ஃபேனுக்கடியில் வைத்து விட்டு
கேண்டீனுக்கு போகிறது நீலம்

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...