அந்த சிமெண்ட் லாரிக்கு வழி வேண்டும்
டிரைவரின் கீழ்படியும் “கிளி”
தன் ஒற்றைக்கையை வெளியே நீட்டுகிறது.
விறைத்து நீண்ட ஒரு உலக்கையைப் போலல்ல..
ஐயா ..அவசரம்.. என்று கெஞ்சுகிற பாவனையிலல்ல..
அது கையை நீட்டியதும்
அதன் மணிக்கட்டில் உதித்த சாம்பல்நிறப்பறவை
அலையலையாய் நீந்துகிறது.
நான் காண்கிறேன்..
இந்த மீப்பெருஞ்சாலையின் அந்தரத்தில்
ஓர் அற்புதநடனமுத்திரை.
அதன் நளினத்தின் முன்னே
உலகே ! நீ வழிவிட்டொதுங்கு!.
நன்றி : கல்குதிரை
Comments