Skip to main content

தங்கவேல், முத்துவேல், ஞானவேல், வடிவேல் …



தங்கவேலுவின் காதல் முத்துவேலை அழைத்து
கோபமாக கத்தியது.
இந்த உலகத்தில் நீதி செத்துவிட்டதுஎன்று சொன்னது.
முத்துலேல் தன் வாழ்வில் அநேகந் தடவைகள்
அந்த வசனத்தை கேட்டிருந்தார்.
ஆமாம்….ஆனால் இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதுஎன்றார்.
அவளொரு நயவஞ்சகி என்றது.
நயவஞ்சகம் என்கிற சொல்லில் கூட
கொஞ்சம்  புளித்த வாடையடித்ததால்
அவர் பேச்சை திசைதிருப்ப முயன்றார்.
“  தமிழ்மூவர்கேட்டீர்களா ? “
என்று கேட்டு வைத்தார்.
தொலைபேசியின் மறுமுனையில் இருப்பது காதல்
அதுவும் ஆக்ரோச கதியில்.
பாவம், அதையவர் அறிந்திருக்கவில்லை.
தமிழ் ஒரு புடலங்காய்
 அந்த மூவரும் சுரைக்காய்கள்
என்று பதில்வரவே, முத்துவேல் அமைதியானார்.
பின் தன் பழைய நினைவுகளின் பாழண்டிய பக்கங்களை
புரட்டத் துவங்கியது அது.
அதில் நிலவுப்பயன் துய்த்த காட்சிகளும்,
கைநரம்பு அறுந்து இரத்தம் பீறிட்ட காட்சிகளும் வந்தன.
பழைய நினைவுகளின் புத்தகத்தை கையில் எடுத்ததுமே
அதன் கோபமும் ரோஷமும் பறந்து விட்டது.
…..ள்…..ளீ .. “ என்று கொஞ்சியது.
அப்போது தோ ஒரு சொரசொரத்த கரம்
 தன் கன்னத்தை செல்லமாக கிள்ள,
 முத்துவேல் அதை எரிச்சலில் தட்டிவிட்டார்.
 அவர் நெளிகிறார்..
 வளைகிறார்
பெருமூச்செறிகிறார்
கொட்டாவி விடுகிறார்
அவர் அடிவயிற்றிலிருந்து கூட
எதோ ஒன்று குமட்டி வருகிறது.
எனினும்,
காலத்தை சற்று பின்னோக்கி ஓட்டிப் பார்த்தால்
அங்கு நாம் இதே காட்சியை திரும்பக்காண்கிறோம்.
ஆனால், அதில் தங்கவேலின் பாத்திரத்தில் நடித்திருப்பவர்
நமது  முத்துவேல்.
கிள்ளப்பட்ட கன்னம் ஞானவேலுடையது.
ஞானவேலின் கதை எனக்குத்  தெரியாது.
ஆனால் எனக்கு வடிவேலைத் தெரியும்.
அவர்தான் தங்கவேலின் கன்னத்தை கிள்ள இருப்பவர்

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...