Skip to main content

இன்பவெறிக் கூச்சல்


         




வருத்தங்களை எண்ணிப்பார்த்தால்
எல்லாம் சரியாக இருக்கிறது.
பிறகு
என்ன எழவிற்கு இந்த மனம்
இப்படி
எம்பி எம்பிக் குதிக்கிறது.

இதன் இன்பவெறிக்கூச்சல் காதைக் கிழிக்கிறது.

ஒரு செடியைப் போல மரத்தை உலுக்கி
பூச்சொரிந்து கொள்கிறது.

தானே பந்து வீசி
தானே மட்டையடித்து
தானே விழுந்து பிடித்து விட்டு
பனியனைக் கழற்றிச் சுற்றுகிறது.

மண்ணிக்கீறி நுழையப் பார்க்கிறது
மலைக்கு மலை தாவப் பார்க்கிறது.

தன் உளுத்த பைக்கின் பிளிறலினூடே
நீளமான கண்டெய்னர் லாரியை
சைடெடுக்க   முனைகையில்
எதிர்ப்பட்டு விட்டதொரு பேருந்து.
இரண்டுக்கும் இடையேயான அந்த நூலிடைச்சந்தில்
அது படுத்து எழுந்து வெளியேறுகையில்
இந்த உலகம்
ஒரு முறை ஜோராக கைதட்டுகிறது.
                          
                  நன்றி : ஆனந்த விகடன்

Comments

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...