Skip to main content

DEMONETISATION

                       
                     


அவள் ஜாதகத்தில் ஏதோ பிசகு
பிறந்ததிலிருந்தே அவளுக்கு ஒன்றும் கிடைத்ததில்லை
ஒழுகாத வீடு கிடைத்ததில்லை
ஒழுங்கான கல்வி கிடைத்ததில்லை
தகப்பனைக் காணவில்லை
சரியான காலத்தில் ருதுவாகவில்லை
சரியான காலத்தில் மணமாகவில்லை
புருஷன் வீடு தங்குவதில்லை
வயிற்றில் கருத் தங்குவதில்லை
எனவே புத்தி ஒரு ஒழுங்கில் இல்லை
எந்த அசதியாலும் அவளை தூங்க வைக்க இயலவில்லை
எத்தனை அடி உயரத்திலிருந்து விழுகின்ற போதிலும்
எந்தக் கோமாளியாலும்      
அவளைச் சிரிக்க வைக்கக் கூடவில்லை
அவள் முறை வருகையில்
வெறுங் கையை நீட்டுவதுதான்
இவ்வுலகத்து வரிசைகளின் இயல்பு.
ஆனால்
அதிசயமாக அவளுக்கு ஒரு புது 500 ரூபாய் கிடைத்துவிட்டது
“ சக்சஸ்....”
 என்றவள் கத்திய கத்திற்கு
 கடவுளின் இமைகளில் நீர் கோர்த்து விட்டது    
அவர் அதைச் சுண்டியெறிய,
நேற்று வெளுத்துக் கட்டிய மழை அதுதான்.


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...