சாலையின் நடுவே நின்று ஓர் ஆட்டோக்காரர் போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார் தூரத்தில் இருந்து பார்க்கையில் ஏதோ விபத்து போல் தெரிந்தது கிட்ட நெருங்க நெருங்க சாக்கடை உடைசல் என்று சந்தேகித்தேன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இரண்டு கல்வி நிறுவனங்களும் ஒரு வங்கியும் நிறுத்தி வைக்கபட்டிருந்தன. கூடவே சில வீடுகளும் எனக்கும் கைகாட்டி ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நிறுத்தி வைத்தார். அரியவகை பச்சோந்தி ஒன்று தேக்கித் தேக்கி சாலையைக் கடந்து கொண்டிருந்தது அது சென்று மறைந்ததும் "யாவும் இயங்குக!" என்று அறிவித்துவிட்டு ஆட்டோவில் ஏறிப்பறந்தது ஓர் அரிய உயிர். |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments