ஓர் ஆனந்தக் கூவல் என் பெயர் சொல்லி அழைத்தது. எங்கோ தொலை தூரத்தில் அடியாழத்தில் அலைந்து கொண்டிருந்த என் கார் நிலைக்குத் திரும்பி விழித்தது. பள்ளித் தோழனொருவன் நகரசுத்தி தொழிலாளியாகி மக்கும் குப்பைக் குவியல்களுக்கிடையே தலைநீட்டி கையசைக்கிறான். அவன் பதுங்கி ஒளியாத அந்த இடத்தில் மலர்ந்து சிரிக்கிறது விடிய விடிய ஏடுகளில் மூழ்கி நான் துப்பறிந்தும் காணாத ஒன்று. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments