சித்தி விநாயகர் முன் அமர்ந்திருக்கிறேன் வேண்டுதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன நீராட்டும் பொருட்டு ஒவ்வொரு அலங்காரமாக அழித்து வருகிறார்கள். தலைப்பாகை நீக்கி ஆடைகள் களைந்து எண்ணெய்ச் ஜொலிப்பின் மீது ஒரு குடம் நீரை வாரி ஊற்றினார்கள். முழுக்கருப்பின் முன் அமர்ந்திருக்கிறேன் ஒரு கிள்ளுச் செவ்வரளி ஏந்தி பக்தையொருத்தி வந்து சேர்ந்தாள் இப்போது மின்கருப்பின் உச்சியில் சின்னஞ்சிறு இளஞ்சிவப்பு இது நான் வேண்டிக் கொண்டிருந்த தெய்வம் அல்ல. தெய்வங்கள் குறுக்கிடாத தெய்வதம். |
Comments