மறுமுனையில் காதலன் விடாது கெஞ்சிக் கொண்டேயிருக்கிறான் இவளோ தலையை ஆட்டி மண்ணைக் கீறி நாணி நாணி கோணிக் கோணி மறுத்துக் கொண்டிருக்கிறாள் கடைசியில் ஒத்துக் கொண்டாள் " ஒரே ஒரு வரி ..." அவளுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கிறான் இந்தத் தடியன் ஆகவே அவள் குரலில் ரகசியத்தைக் குழைக்கிறாள் ரகசியம் பேச்சையே பாட்டாக்குவது பாட்டை அது என்னென்ன செய்யும் அடுத்த முறை இன்னும் அவளை நெருங்கி அமர்வேன் இன்னும் அவளை ரகசியமாக்குவேன். |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments