பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின் சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும் உண்டு சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!