Skip to main content





எழுபது கடல் எழுபது மலை

எழுபது கடல் எழுபது மலை தாண்டி
எங்கோ இருக்கிறது
நான் தழுவ வேண்டிய உடல்
கடலெங்கும் சுறாக்கள் அலைகின்றன
மலையெங்கும் கொடுங்காவல் நிலவுகிறது
முதல் கடலின் பாதியில் நிற்கிறது
எரிபொருள் தீர்ந்த படகு
நான் ரொம்பவே சோர்ந்துவிட்டேன்
தாகமாய் தவிக்கிறது எனக்கு
இவ்வளவு பெரிய கடலுக்கு நடுவே
எனக்கு ஒருவாய் நீரில்லை
இன்னும் 69 1/2 கடல்களும்
எழுபது மலைகளும் மீதமிருக்க
துளியும் எள்ளலின்றி
குரல் தழுதழுக்கச் சொல்கிறேன்
“யாம் ஷகிலாவின்
பாத கமலங்களை வணங்குகிறோம்”

- நன்றி: உயிர் எழுத்து

Comments

Anonymous said…
aam.poankiperkum nam kaamathai eattru nirkum pen theaivam ival
ஆத்தாடியோவ்.
:-))))))))
Unknown said…
இது என்ன எழவு கவிதை..
சுத்தமான ஆணாதிக்க பார்வை உனக்கான உடல் இல்லை என்றால் ஷகிலாவை தேர்ந்தெடுப்பாயா..
உன் தோழி இப்படி தேர்ந்தெடுத்தால் உனக்கு சம்மதமா..இல்லை தோழி நீங்கள் ஷகிலாவை வைக்கும் இடத்தில் உங்களை வைத்திருந்தால் சம்மதமா..
இதை ஒரு பெண் எழுதியிருந்தால் பிடித்து கொதறி இருப்பீர்கள் நீங்கள் ஆண் எதுவேண்டுமானலும் எழுதலாம் அதற்கு பின்முன் இடை நவீனத்துவ விளக்கம் வேறு தரலாம் இதெல்லாம் காலகொடுமை