Skip to main content





எழுபது கடல் எழுபது மலை

எழுபது கடல் எழுபது மலை தாண்டி
எங்கோ இருக்கிறது
நான் தழுவ வேண்டிய உடல்
கடலெங்கும் சுறாக்கள் அலைகின்றன
மலையெங்கும் கொடுங்காவல் நிலவுகிறது
முதல் கடலின் பாதியில் நிற்கிறது
எரிபொருள் தீர்ந்த படகு
நான் ரொம்பவே சோர்ந்துவிட்டேன்
தாகமாய் தவிக்கிறது எனக்கு
இவ்வளவு பெரிய கடலுக்கு நடுவே
எனக்கு ஒருவாய் நீரில்லை
இன்னும் 69 1/2 கடல்களும்
எழுபது மலைகளும் மீதமிருக்க
துளியும் எள்ளலின்றி
குரல் தழுதழுக்கச் சொல்கிறேன்
“யாம் ஷகிலாவின்
பாத கமலங்களை வணங்குகிறோம்”

- நன்றி: உயிர் எழுத்து

Comments

Anonymous said…
aam.poankiperkum nam kaamathai eattru nirkum pen theaivam ival
ஆத்தாடியோவ்.
:-))))))))
Unknown said…
இது என்ன எழவு கவிதை..
சுத்தமான ஆணாதிக்க பார்வை உனக்கான உடல் இல்லை என்றால் ஷகிலாவை தேர்ந்தெடுப்பாயா..
உன் தோழி இப்படி தேர்ந்தெடுத்தால் உனக்கு சம்மதமா..இல்லை தோழி நீங்கள் ஷகிலாவை வைக்கும் இடத்தில் உங்களை வைத்திருந்தால் சம்மதமா..
இதை ஒரு பெண் எழுதியிருந்தால் பிடித்து கொதறி இருப்பீர்கள் நீங்கள் ஆண் எதுவேண்டுமானலும் எழுதலாம் அதற்கு பின்முன் இடை நவீனத்துவ விளக்கம் வேறு தரலாம் இதெல்லாம் காலகொடுமை

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...