Skip to main content

கவிதை


பல்சர் கவிதைகள்

1. ராஜகுல முறை ஒழிக்கப்பட்டுவிட்டதால்
மரணப்படுக்கையில் வீழ்ந்துவிட்ட
ராஜ தோரணைக்கு
உயிரூட்டும் முயற்சியாய்
பஜாஜ் நிறுவனம்
அறிமுகப்படுத்தி இருப்பதே
இந்த பஜாஜ் பல்சர்.

2. ஒரு கன்றுக்குட்டியை
ஏற்றிக் கொல்வதற்கு போதுமான
இரண்டு பெரிய சக்கரங்கள்
இதற்குண்டு.


3. அதிகாலை வெய்யிலில் மினுங்கும் பல்சரை
வெற்றித் திளைப்பில் பளீரிடும்
வீரனின் கை வாள் என்பேன்.


4. மரநிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த
பல்சரின் மீது
ஒரு மலர் உதிர்ந்து கிடப்பதை பார்த்தேன்.
பணிப்பெண்கள் பூ மாரி பொழிந்ததில்
ஒரு பூ
மகாராஜவின் தலையிலேயே தங்கிவிட்டது
என்று நினைத்துக் கொண்டேன்.

5. சமீபகாலமாக
ஒரு கலகக்குரல் ஒலித்துவருகிறது எனக்குள்.
வாயில் காப்போன் தேரில் போனால்
பாதைக்கும் தேருக்கும் ஒன்றும் நேராது.


6. தன் பொக்கிஷத்தை வீதியில் வைத்துவிட்டு
அரைமணி நேரத்திற்கும் அதிகமாய்
எங்கோ பரதேசம் போபவன்
இன்னொன்று வாங்கிக் கொள்ளட்டும்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...