Skip to main content

ஸ்கூட்டிகள் மிதக்கும் கனா





1. அவன் கனவில் ஸ்கூட்டிகள் மிதக்கின்றன.
வெள்ளை, கருப்பு. அரக்கு, சில்வர் என
வகைவகையானவை.
எல்லாமும் முடுக்கப்பட்டு
குறுக்கும் நெடுக்குமாக ஓடத் துவங்குகின்றன.
ஒரு கம்பிக்கருவி எண்ணற்றவிரல்களால்
ஒரே சமயத்தில்
கண்டமேனிக்கு சுண்டப்படுகிறது.
விறைத்து அதிரும் அதன் உடல்
தாள மாட்டாது
ஒருக்களித்து சாய்கிறது.
ஸ்கூட்டிகள் மெல்ல மெல்ல வேகமாகி
காற்றில் ஒரு காற்றாகும் தருணத்தில்
துள்ளிக் குதிக்கிறது துளி வெண்மீன்.

2. இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா?
நின்று கொண்டிருக்கும் ஸ்கூட்டியின் மேல் படுத்துக்கொண்டு
அதை வெறி கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
மனநோயாளியின் புகைப்படமொன்று
அதில் வந்துள்ளது.

3. இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.
நிறுத்திவிட்டு எங்கேயும் செல்லமுடிவதில்லை.
திரும்பி வந்து பார்த்தால்
சீட் கவரில் விந்துத் திட்டுக்கள்.

4. அவனிடம் திடமான கொள்கைகள் இருக்கின்றன.
மகத்தான லட்சியங்கள் இருக்கின்றன.
அதை வலியுறுத்த
அவனிடம்
எண்ணற்ற புத்தகங்களும் இருக்கின்றன.
ஒரு ஸ்கூட்டி வாசலில் நின்று கொண்டு
ஹாரணடிக்கிறது.
" எக்ஸ் க்யூஸ் மீ "
மகத்தான லட்சியங்களே!

5. அதிகாலை நீராடி
நெற்றியில் நீறு சாற்றி
" ஜலமலப்பேழை", " ஜலமலப்பேழை என்று
நூற்றியெட்டு முறை எழுதுகிறான் தினமும்.
எல்லாம் ஒரு ஸ்கூட்டியை பார்க்கும் வரை தான்.

Comments

Poem Hunter said…
scooty produced for that purpose. but you missed all the contigencies of Urumeengalatra nathi . . .

since?
//இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.
நிறுத்திவிட்டு எங்கேயும் செல்லமுடிவதில்லை.
திரும்பி வந்து பார்த்தால்
சீட் கவரில் விந்துத் திட்டுக்கள்.//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்
nanba, thankal thiru mukathai kaanbithal mattumea thankaludan naan uraiyaada mudiyum
\\துள்ளிக் குதிக்கிறது துளி வெண்மீன்.\\

:)))))))))))))
class nanba

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...