Skip to main content

பால்ய பருவமென்பது..





உங்கள் பால்யத்தைக் கேட்டால்,
நீங்கள்
கூடைச்சேருள் அமர்ந்து சிரிக்கும் ஒரு குழந்தையையோ
விறைத்த ட்ரவுசரும்,விறைத்த முகமுமாய்
சீருடையில் நிற்கும் ஒரு பள்ளிச்சிறுவனையோ காட்டுகிறீர்கள்.
ஒருவன் தன் கல்லூரி ஆல்பத்தைக் காட்டுகிறான்.
அதில் அவன் பல் முப்பத்திரண்டும் தெரிகிறது.
நான் நேற்று காலை எடுத்த என் புகைப்படத்தைக் காட்டுவேன்.

பால்யத்தின் வாகனத்திலேறி
பால்யத்தின் கனவுகளோடு
தொலைதூர மலைவெளிக்கு போகிறது ஒரு காதல்.
அது கட்டிக்கொள்ள
எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை சமைத்து வைத்தீரே,
வாகனத்தில் நிரப்பப்பட்டிருக்கும்
பால்யத்தின் காற்றை
அது வீடு திரும்பும் வரையிலேனும்
பிடுங்கி விடாதிருப்பீரா ஆண்டவரே..
நம் இனிப்பினிப்பான கற்பனைகள்
ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில்
கூடைச்சேர்கள் காலொடிந்து சரிகின்றன.
நம் குழந்தைமையின் அமர்ந்தகோலம்
நடுநடுங்கியாடி
தொப்பென்று கீழே விழுகிறது

Comments

இசை, நீங்கள் கவிஞர் என்பதில் எனக்கு என்றைக்குமே சந்தேகம் இருந்ததில்லை.

வழக்கம்போல, நல்ல கவிதை.

“நண்பரே“என்ற விளிக்கப்படும் தகுதியை என்றேனும் பெறுவேன்?
” டா” வில் அழைக்கபடும் நாளுக்காக
காத்திருக்கிறேன்..
Anonymous said…
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.
ரொம்ப நல்லா இருக்குங்க (உங்கள் பெயரும் தான்)
கவிதையின் இறுதியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் வியாபகமெடுத்து நிற்கிறான் இசை.கவிதையில் அவன் கொற்றம் நெடுநாள் வாழும்!!!
உருகுவேயிலும் இன்று
" சனிக்கிழமைதான்" போல
என் இனிய நண்பனே,

உங்கள் எல்லோரோடும் சேர்ந்து அந்த நாளைக் கொண்டாட முடியாத ஏக்கத்தை உங்களது பதிவு பல மடங்காக்கிவிட்டது.
இசை கூட்டத்தில் நல்ல பிள்ளையாக வெகு அமைதியாக இருந்தாரே என்?

சமயவேல்

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...