Skip to main content

குட்டி குட்டியாக சில பிரமாதமான வாழ்க்கைகள்

” இந்த வாழ்வு தாறுமாறான பீட்டில் பாடப்படும்
மோசமான பாடல் ”
என்று சொல்வார் சின்னதங்கம் பீட்ட்ர்ஸன்.
அதனால் தான் அதற்குள்
குட்டி குட்டியாக சில பிரமாதமான பாடல்கள்.
ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும்
ஓட்டிச் செல்கிறது..

ஒரு நாள்,
அது சைக்கிள் சிறுவர்கள்
கையசைத்து கடந்து செல்கிற
PBS வாகனம்.
பெருநகர சாலையின்
வெள்ளைக் கோட்டிற்கு இப்புறம்
கருங்குயில்கள் பறந்து திரியும்
நந்தவனம்...

மறு நாள்,
அது பித்தம் முற்றிய ஒரு மேற்கத்தியனுடையது.
ஹாரனின் ஊளையை இன்னொரு கருவியிசையாக்கிக் கொண்டு
நூலிடைச்சந்துகளில் புகுந்து வளைந்து
களிபீடித்தாடுவது...

ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும்
ஓட்டிச் செல்கிறது...

நானும் ஆண்ட்ரியாவும்
கடவுளாகிக் கொண்டிருக்கையில்
குறுக்கிட்டதொரு பெரிய டேங்கர் லாரி
மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது
ஆனந்தம்..
பரமானந்தம்..

( ஜான் சுந்தருக்கு..)

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...