Skip to main content

என் பொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன்

என் மொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன்
அது கன்னங்கரு குகையில் அலைந்து திரியும்
கன்னங்கரு மிருகம்.
வன்மத்தின் கொள்ளி மின்னுகிற கண்கள்
அதன் உருவம்.
இந்த உலகத்தின் ஒவ்வொரு புன்னகையும்
அதன் கொள்ளியில்
வாய்வைத்து ஊதுகிறது.
சொர்க்கபுரியின் கூச்சல்களை சதா உன்னித்திருக்குமது
அதை சகிக்கவொண்ணாத தருணத்தில்
ஒரு இடியை உறுமுகிறது.
கடவுள்
அந்தரத்தில் மறைகின்ற மாமிச துண்டங்களை
அதற்கு வீசியெறிந்தார்.
எனவே அது பக்கத்து தட்டை பார்க்க வேண்டி வந்தது
அழுகையில் ஊறி நைந்த இரவுகளில் இருந்து
திசைதெறிக்க ஓடி வருமதன் குறுக்கே
நீதியை முழங்கும் கனவானை
அது வாயைதிறவாமலேயே மென்று விடுகிறது.

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.