Skip to main content

போலீஸ் நம்மை வீட்டிற்கு அனுப்புகிறது


   


நேற்று மாலை
சுரேஷ்பேக்கரி வாசலில் நின்று
நானும் இளங்கோவும் பேசிக்கொண்டிருந்தோம்.
இளங்கோ எப்போதும் ஒரு தத்துவவாதியை
உடன் அழைத்துவருவது வழக்கம்.
இந்தமுறை யாரோ யக்ஞ வல்கியராம்.

சிறிது நேரத்திலெல்லாம்
சாமும், ஜானும் வந்துவிட்டார்கள்.
“ ஏகாந்த..வேளை..என்று பாடியபடி
ஜானொடு ஜெயராமன்.

எல்லோரும் தென்காசிக்குப் போய்
கலாப்ரியாவை கூட்டி வந்தோம்.
கொஞ்சம் கூட்டம் தான் கூடிவிட்டது.
கலாப்ரியா அடிக்கடி யெயராமனை
கட்டியணைத்து முத்திக்கொண்டிருந்தார்.
அது குறித்து எம்.கே.டி க்கு ஒரு வருத்தமும் இல்லை
அவர் எப்போதும் போல் பூரித்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார்.

பணிரெண்டு பேர் கூடி
மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீர்
மதுரம்....அதி மதுரம் 


பக்கத்து பெட்டிக்கடையில் வியாபாரம் தூள் பறக்கிறது.
சுகுமாரன் ஒரு பாக்கெட்டின் கடைசி சிகரெட்டை
புகைத்துக்கொண்டிருக்கையில்
கரகரத்த சத்தத்துடன் கடைகளின் ஷட்டர்கள் கீழிறக்கப்பட்டன.
விளக்குகள் அணைக்கப்பட்டன.
ஆணைகளைப் பிறப்பித்த படியே 
PATROL “  வண்டி   எங்களைக் கடந்து போனது.
இடை நின்ற பேச்சு தொடர்ந்து வளர்ந்தது.
தொ.ப  “ குடிசாமிகளுக்கு தரப்படுகிற இரத்தப் பலி “
குறித்து சொல்லிக்கொண்டிருக்க
போன வண்டி திரும்பி வந்ததை யார் கண்டார் ?
“ டேய்.. “ என்கிற சத்ததிற்கு
 கூட்டம் திசைக்கொன்றாய் சிதறி விட்டது.
 எம்.கே.டி தன் பட்டுஜரிகை வேட்டியை
 தூக்கிக்கட்டிக்கொண்டு ஒரு மூத்திரச் சந்திற்குள் ஓட
 நமது யக்ஞவல்கியர் பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்து கொண்டார்.
ஏண்டா .. உங்களுக்கெல்லாம் வீடே கிடையாதா ..
 என்று கேட்கிறது போலீஸ்
 ஐயா , நிஜமாகவே எங்களுக்கென்று ஒரு வீடில்லை.
 வீடு எங்களை போலீஸில் பிடித்து தர
 போலீஸ் எங்களை வீட்டிற்கு பிடித்துக் கொடுக்கிறது.



                                           
                                                                                                                                                                                                    (  ஜானுக்கு ...)


                                                      
                       நன்றி : தி இந்து தீபாவளி மலர்

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...