Skip to main content

சாய்ஸ்

                                   
               




 பிள்ளைவரம்  வேண்டி
  அரசமரம்  ஆலமரம்
  அந்தமரம்  இந்தமரம்
  கண்டமரம்  சுற்றிக்களைத்த  கடைசியில்
  இரங்கி வந்தது இறை
 “ தற்போதைய கையிருப்பு இரண்டு ஆண்மகவுகள்…            
  ஒரு  குழந்தை சச்சின் டெண்டுல்கர் என்று
  நாமகரணம் சூட்டப்படும்.
  16 வயதில்  மட்டையைத் தூக்கிக்கொண்டு உலகத்தின் முன் வருவான்
  தன் கதாவீச்சால்  சாதனைகளின்  நெஞ்சைப்பிளப்பான்
  ரூபாய், டாலர் , யென் என எல்லாவற்றிலும் சம்பாதிப்பான்.
  இவன்  துய்த்தெறிந்த   பொருட்கள்  லட்சங்களில்  ஏலம் பெறும்.
  இவனுக்கு  ஏக்கமே இராது
 அதன்  விளைவாக  கனவும் வாராது.
  புகழ்  வீங்கி  முற்றியதோர்  கட்டத்தில்
 “ கடவுள் என்றே அழைக்கப்படுவான்
   நீ கடவுளின்  தாயாக  இருப்பாய்
  இன்னொருவன் பெயர்  சத்தியமூர்த்தி
  லேசாக  நா  நடுங்கும்
 அவ்வப்போது  உடல் கிடந்து  உதறும்
 அவசரவசரமாக   மீசை அரும்பி
அக்காக்கள்  குளிக்கையில்  படலைப் பிரிப்பான்
பகல் முழக்க  தூக்கம்
இரா முழக்க ஆட்டம்
என்றலைந்து  திரிவான்.
அப்பாவை விழுங்கிவிட்டு
உன்னை வைத்து வைத்து  தின்பான்.
குலப்புகழின்  தொடைச்சொறி..
மலக்குழம்பில்  நெளிபுழு….
நின் கண்ணீரில் கரைந்தே கதை முழுக்க சொன்னோம்
இருவரில் ஒருவர்
யார் வேண்டும்  சொல் மகளே ! “
என் தாயவள்
மாசற்ற மாணிக்கம்
மாற்றுகுறையா தங்கம்
சத்திதான் வேண்டுமென்று
ஆடாது அசையாது
உறுதி காத்து நின்றதில்  பிறந்து வந்த குழந்தை  நான்
அன்னை ! அன்னைஅருட்பெருஞ்சோதி !
அன்னை ! அன்னைதனிப்பெருங்கருணை !

Comments

Saththi, saththi
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
Saththi, saththi
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
karur karthik said…
அப்பாவை தின்று வளர்ந்த திருமகனில் நானும் ஒருவன் சத்தி.

Popular posts from this blog

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது

                      ( சாம்ராஜின் “ என்று தானே சொன் னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )     -  இசை-     சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்   லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.     துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.     பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் ...