Skip to main content

சாய்ஸ்

                                   
               




 பிள்ளைவரம்  வேண்டி
  அரசமரம்  ஆலமரம்
  அந்தமரம்  இந்தமரம்
  கண்டமரம்  சுற்றிக்களைத்த  கடைசியில்
  இரங்கி வந்தது இறை
 “ தற்போதைய கையிருப்பு இரண்டு ஆண்மகவுகள்…            
  ஒரு  குழந்தை சச்சின் டெண்டுல்கர் என்று
  நாமகரணம் சூட்டப்படும்.
  16 வயதில்  மட்டையைத் தூக்கிக்கொண்டு உலகத்தின் முன் வருவான்
  தன் கதாவீச்சால்  சாதனைகளின்  நெஞ்சைப்பிளப்பான்
  ரூபாய், டாலர் , யென் என எல்லாவற்றிலும் சம்பாதிப்பான்.
  இவன்  துய்த்தெறிந்த   பொருட்கள்  லட்சங்களில்  ஏலம் பெறும்.
  இவனுக்கு  ஏக்கமே இராது
 அதன்  விளைவாக  கனவும் வாராது.
  புகழ்  வீங்கி  முற்றியதோர்  கட்டத்தில்
 “ கடவுள் என்றே அழைக்கப்படுவான்
   நீ கடவுளின்  தாயாக  இருப்பாய்
  இன்னொருவன் பெயர்  சத்தியமூர்த்தி
  லேசாக  நா  நடுங்கும்
 அவ்வப்போது  உடல் கிடந்து  உதறும்
 அவசரவசரமாக   மீசை அரும்பி
அக்காக்கள்  குளிக்கையில்  படலைப் பிரிப்பான்
பகல் முழக்க  தூக்கம்
இரா முழக்க ஆட்டம்
என்றலைந்து  திரிவான்.
அப்பாவை விழுங்கிவிட்டு
உன்னை வைத்து வைத்து  தின்பான்.
குலப்புகழின்  தொடைச்சொறி..
மலக்குழம்பில்  நெளிபுழு….
நின் கண்ணீரில் கரைந்தே கதை முழுக்க சொன்னோம்
இருவரில் ஒருவர்
யார் வேண்டும்  சொல் மகளே ! “
என் தாயவள்
மாசற்ற மாணிக்கம்
மாற்றுகுறையா தங்கம்
சத்திதான் வேண்டுமென்று
ஆடாது அசையாது
உறுதி காத்து நின்றதில்  பிறந்து வந்த குழந்தை  நான்
அன்னை ! அன்னைஅருட்பெருஞ்சோதி !
அன்னை ! அன்னைதனிப்பெருங்கருணை !

Comments

Saththi, saththi
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
Saththi, saththi
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
karur karthik said…
அப்பாவை தின்று வளர்ந்த திருமகனில் நானும் ஒருவன் சத்தி.

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685