Skip to main content

ஐயோ… இந்தக் கரிப்பு !




எனக்கு எம்ஜியாரை அறவே பிடிக்காது
அதிகாலையிலேயே
அவர் கவுண் உடையில் தோன்றி
ஏதோ சூளூரைத்துக்கொண்டிருந்தார்.
எனவே சேனலை மாற்றினேன்.
மாற்றிய கையோடு  எதேச்சையாய்
கண்ணாடி பார்க்க
அது ரசமிழந்து உளுத்திருந்தது.
அதை மாற்றினேன்.
அழுக்கு அரசாளும் சீப்பை மாற்றினேன்.
இந்த பாத்ரூம் பைப்பை மாற்ற வேண்டுமென்று
பல்லூழிகளாக எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று அதை மாற்றினேன்.
அண்ணாந்து நோக்க
COFFE- யும் , தினசரியுமாக
பால்கணியில் வீற்றிருந்தான் எதிர்வீட்டு சீமான்.
அவனை மாற்றினேன்.
என் மொபட்டை
பள்ளத்துள் ஒதுக்கிவிட்டு பறக்கிறது ஒரு “ SCORPIO”
அதை சைக்கிளாக மாற்றினேன்.
பணிமனையில் பக்கத்துசீட்டில்
எப்போதும்
ஓர் “ அப்போது அலர்ந்த தாமரை “
அதை மாற்றினேன்.

உணவுவேளையில்
சோற்றுப்பொதி திறந்து அமர்ந்தால்
10 வாழ்க்கைகான உப்பை
அள்ளிக் கொட்டியிருந்தாள்  பத்தினி.
அந்த ரிமோட்டை
என் நெற்றிப்பொட்டில் வைத்து
ஒரு அழுத்து அழுத்தினேன்.

Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.