Skip to main content

இன்றின் கேரட்


                  



இன்றைய நிலவரப்படி
கால்கிலோ கேரட்  7 ரூபாய்கு விற்கப்படுகிறது
நான் எப்படியும் தினமும்
குறைந்தது இருநூறு ரூபாய் சம்பாதித்து விடுவேன்
ஆக எப்படியும் எனக்கு கேரட் உண்டு
கேரட்டுக்கு  இந்த கேரட் நிறம் எப்படி வந்தது ?
மேலும், கேரட் எங்கு எப்படி விளைகிறது ?
அதன் மூலக்கூறுகள் யாவை ?
இந்த வெங்காயமெல்லாம் எனக்குத் தேவையில்லை
நமக்கு ஆயிரத்தெட்டு  சோலிகள் கிடக்கின்றன
ஓவராகச் சிந்திக்காதே ..
இரண்டு மிளகாயைக் சேர்த்துப் போட்டு..
தேங்காயை துருவிக் கொட்டினால்...
 அட... டடா...
விலைவாசி விண்ணைமுட்டி அதற்கு அப்புறமாய் பறந்தாலும்
நம் கேரட்டை நம்மிடமிருந்து யாராலும் பறித்து விட முடியாது
போதும் உன் கேரட் புராணம்...
நாளை இந்த ப்ளாஸ்டிக் டம்ளர்களை மாற்றி விட வேண்டும்
ஒரு மாசத்துக்கும் மேல் ஆகிறது..
ஆமாம்.. மாற்ற வேண்டும்... மாற்ற வேண்டும்
நீ உன் டம்ளரை எடுத்துக் கொள்...
ஓ.. நீ தான் இல்லை அல்லவா ?
சண்டையிட்டுப் பிரிந்து விட்டாய்..
சரி... பிரிந்தால் போய் விட  வேண்டுமா என்ன ?
அந்த நீலப்படத்தை போடு ...
வேண்டாம்....
த்தூ.... மொழுக்கட்டையென்று...
நேற்றே மோசமாக சலித்து விட்டது
விஜய் ஆண்டனியை கத்தவிட்டு விட்டு
கொஞ்சம் ஆட்டம் போடுவோமா இன்று ?
உனக்கு புத்தியே வரவில்லை இன்னும்...
“ இன்று” என்று முடிக்காதே...
“ இன்றில் “ என்று முடி...
 உடனே இது சிரீயஸ் கவிதை ஆவதைப் பார் !




Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...