கறுத்த முகத்தில்
நரையோடித் திரண்டிருந்தது
தோளில் அழுக்குத் துண்டோடு
காக்கிச் சீருடையில் இருந்தார்
வார் அறுந்த செருப்பைக் கண்டு
பிழையாக
ஒரு கணம் இரக்கம் கொண்டு விட்டேன்
அப்போதுதான்
அவர் தன் சைனா பொபைலை
வெளியே எடுத்தார்
எதையோ தேடி முடுக்கி விட
" வானம் தாலாட்டி மேகம் தள்ளாடியது "
கமலை விடவும் பிரமாதமாக தலையாட்டுகிறார்
பாடகனை விடவும் பிரமாதமாக பாடுகிறார்
என்னைக் காட்டிலும் பத்து மடங்கு லயிக்கிறார்
ஐயா... என்ன ஓட்டுகிறீர் ?
புஷ்பகவிமானம் தானே ?
நன்றி : ஆனந்தவிகடன்
Comments
இந்த கவிதையைத்தான்
வாசிக்க ஏங்கியிருந்தேன்
தற்போது பதிவேற்றியதால்
என் மைண்ட் வாய்ஸ்
ஜீன்ஸ் படப்பாடலான
"எனக்கே எனக்கா" என முணுமுணுக்கிறது