அந்நேரம் வரையிலும்
அவளைத்தான் தின்று கொண்டிருந்தேன்.
அவள் வளைவுகளில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.
அவள் முலைகளை உண்டு கொண்டிருந்தேன்
வெண் முதுகுப் படகில் மிதந்து கொண்டிருந்தேன்
மருத்துவர் அறைக்குள் போய்
திரும்பியவள்
துப்பட்டாவால் கண்களை ஒத்திக் கொண்டு நிற்கிறாள்
நெளிவும், சுளிவும்
முலையும், படகும்
சட்டென மறைந்து விட்டன.
கண்ணீர்தான்
எவ்வளவு பரிசுத்தம் !
Comments