உடலில் ஊனமொன்றுமில்லை.
பெரிய மூப்பும் இல்லை.
எப்போதும்
நடுச்சாலையில் குந்தியிருக்கும்.
முணுமுணுப்பு போன்றும் குரைத்ததில்லை.
சின்ன உறுமல் கூட இல்லை.
கார் சக்கரங்கள் ஏற்றுவது போல் வருகையில்
மேலும் கொஞ்சம் உடலைக் குறுக்கி
மெதுவாய் அசைந்துதரும்
பிறகு அப்படியே கிடக்கும்
மற்றநாய்கள்
கூடிக்களித்து கடித்து விளையாடும் திடலை
கண்டும் காணாதது போல் கண்ணயர்ந்திருக்கும்.
செல்லமே!
எப்போது நீ
நாயிலிருந்து நாய்போல் ஆனாய்!
Comments