Skip to main content

அம்மையுடன் ஓர் உரையாடல்

             
           



ஒளிப்புள்ளிகள் ஒன்றிணைந்து
         அம்மை எழுந்தருளல்


"மகனே ! என்னதான் உன் வேதனை?"

"தனியன்.."

"பொய்"

"நிஜமாகத்தான்.."

" உன்னோடு யாருமே இல்லையா?"

 " இருக்கிறார்கள்"

பிறகு?

" இருப்பதுபோல் இருக்கிறார்கள்"

 "உறுதியாக இருக்க வை.."

"போய்விடுவார்கள்.."

" கலங்காதிரு மகனே! "

" இதற்கு இது பதிலில்லை."

 "வண்டிச்சக்கரம்.. மன்னிக்க ..   காலச்சக்கரம்...  அது சுழலத்தான் செய்யும்"

" பரவாயில்லை.. வண்டிச்சக்கரமே புதிதாக உள்ளது"

" நன்றி !"

"அது ஏன் சுற்றிக் கொண்டேயிருக்கிறது?"

"சுழன்றால்தானே அது சக்கரம்?"

"நன்றாகச் சுழலட்டும்....ஆனால் அது ஏன் எப்போதும் என் வீட்டு முன்பாகவே சுற்றுகிறது?"

" மகனே ! அது மொத்த உலகிற்கும்தான் சுழல்கிறது... அப்படியே உன் வீட்டுப் பக்கமும் வருகிறது"

"இருக்கலாம்.  ஆனால் என் வாயிலில் மட்டும் கொஞ்சம் வேகமாகச் சுற்றுகிறது"

" அது உன் மாயை..'

" கடைசி ஆயுதத்தை இவ்வளவு சீக்கிரமாகவே எறிந்து விட்டாயே?"

"மாயையை உண்மையென்றும் சொல்லலாம்.."

"எனில், உண்மையாகவே போய் விடுவார்கள்... அப்படித்தானே?"

"என் மடிக்கு வா!"

" மாட்டேன்.. போர் அடிக்கிறது"

"ஒவ்வொரு முறையும் இந்த ஆறுதலை புதிது போலவே நிகழ்த்த  எனக்கும்தான் போர் அடிக்கிறது.."

அப்படியெனில்,  உறுதியாகப் போய் விடுவார்கள்.. இல்லையா?

"மகனே ! தனிமை நல்லது!"

" ஆம்"

" பிறகென்ன? "

" நல்லதெல்லாம் நல்லதா என்ன?"


       அம்மை புகையாகி மறைதல்



















Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...