Skip to main content

நான் ஒரு பாஸ்வேர்டு


ஒரு பாஸ்வேர்டை கண்டுபிடித்து விட்டால்
என்னைக் கண்டுபிடித்து விடலாம்
5 வருடங்களுக்குள் என்னிடம்
 13 பாஸ்வேர்டுகள் சேர்ந்து விட்டன.
நான்தான் உருவாக்குகிறேன் .
ஆனால்
அவைதான்  என்னை மேய்க்கின்றன.
13 பாஸ்வேர்டுகளையும் மூளைக்குள் ஒளித்து வைத்தேன்
வழுக்கி வழுக்கி விழுந்தன.
பதிமூன்றையும் ஓரிடத்தில் ஒளித்து வைத்து
அதை ஒரு பாஸ்வேர்டால் ஒளித்தேன்
ஒன்றைத் திருடி விட்டால் 13 யும் திறந்து விடலாம்.
13 பாஸ்வேர்டையும் பறிகொடுத்து விடுவதென்பது
ஒரு ஜட்டி கூட இல்லாமல் நிற்பது.
எனவே
பதிமூன்றையும் பதிமூன்று இடங்களில் ஒளித்தேன்.
அந்தப் பதிமூன்று இடங்களையும்
ஓரிடத்தில்  ஒளித்து வைத்தேன்.
எவனோ ஒரு கில்லாடி
அதையும் துப்பறிந்து தூக்கி விட்டால்?
நான் எவ்வளவு பெரிய கில்லாடி ?
13 இடங்களின் முதல் எழுத்தை மூளைக்குள்தான்  ஒளித்து வைத்திருக்கிறேன்
அவை குழம்பி விடக்கூடாதென்று
ஒரு காகிதத்தில் ஒளித்திருக்கிறேன்.
அந்தக் காகிதத்தை
ஒரு தனியிடத்தில் ஒளித்திருக்கிறேன்.
இப்போது
நான் முழுவதுமாக மூடப்பட்டவன்.
என்னை ஆட்டவோ அசைக்கவோ இயலாது.

            காலச்சுவடு : ஜனவரி -2020

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...