ஆதாமிற்கும் ஏவாளிற்கும் இடையே உறவு கனிந்து 90 நாட்கள் கழிந்திருந்தன. 91 வது நாள் இரவில் அவள் அவனை விட்டுவிட்டு ஓடி விட நினைத்தாள். அப்போது முதல் துறவு பூத்தது. பிறகு உறவெனவும் துறவெனவும் வளர்ந்து வந்தது மனித குல வரலாறு சித்தார்த்தன் துறவு போய் பெருஞ்செல்வம் கொண்டு வந்து சேர்த்தான் வாழ்வைக் கண்டடைய விரும்பிய சிலர் துறவு வழியே கிளம்பிப் போனார்கள். வாழவும் தெரியாத சாகவும் துணியாத சிலர் துறவுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். உறவு பல்வேறு கிளைவிட்டு செழித்தது போலவே துறவும் செழித்துச் செழித்து கூடவே வந்தது நேற்றிரவு நான் என் DP யை நீக்கிவிட்டேன். இப்போது சின்ன வட்டத்துள் ஒரு சூன்யம் இது ஒரு மினி துறவு பல்லி நீளத்துச் சவுக்கால் சில இதயங்களை சுளீரென விளாசுவது. |
Comments