Skip to main content

ஒன்று

 



ந்தியை படமெடுக்க 

கோணம் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.


அங்கேயும் இங்கேயும் ஓடி

கடைசியில் 

ஓரிடத்தைக் கண்டுபிடித்து 

முழந்தாளில் அமர்ந்தாள்.


கொஞ்ச நேரத்திற்கெல்லாம்

அதனோடு பேசத் துவங்கிவிட்டாள்.


" இடுப்பில் கை வைத்து நில்"

  தன் சின்ன மகளை அதட்டுவது போலே அதட்டுகிறாள்.


அந்தியை அழகி படமெடுக்கையில்

அவளைப் பார்த்தால் போதும்

அந்தியைப் பார்த்தது போலே.




Comments