அந்தியை படமெடுக்க கோணம் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அங்கேயும் இங்கேயும் ஓடி கடைசியில் ஓரிடத்தைக் கண்டுபிடித்து முழந்தாளில் அமர்ந்தாள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதனோடு பேசத் துவங்கிவிட்டாள். " இடுப்பில் கை வைத்து நில்" தன் சின்ன மகளை அதட்டுவது போலே அதட்டுகிறாள். அந்தியை அழகி படமெடுக்கையில் அவளைப் பார்த்தால் போதும் அந்தியைப் பார்த்தது போலே. |

Comments