மடிந்தும் மடியாத சாம்பல் மாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த என் கார் திடீரென நிதானத்திற்கு வருகிறது. ஊரத் துவங்குகின்றன அதன் சக்கரங்கள். என் வெறிநோய்க்கு குறுக்கே பறந்து வருகிறது கொக்குத் திரள் உண்மையில் எனக்கு ஒரு அவசரமும் இருக்கவில்லை. இங்கிருந்து அங்கு போனாலும் அங்கிருந்து எங்கு போனாலும் நான் ஒரே ஒரு ஆள்தான் உண்மையில் எனக்கு எந்த அவசரமும் தேவையில்லை. நான்கைந்து கொக்குகள் காரின் கூரையை மொய்த்துச் சுற்ற அடைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கதவுகளை கடந்து போயின இரண்டு |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments